ஜார்க்கண்ட்: தீவிரவாதிகளால் 3 இளைஞர்கள் சுட்டுக் கொலை

தினமணி  தினமணி

ஜார்க்கண்ட் மாநிலம், கூன்ட்டி மாவட்டத்தில் இளைஞர்கள் 3 பேரை தீவிரவாதிகள் சுட்டுக் கொன்றனர்.

இதுகுறித்து காவல் துறை அதிகாரி ஒருவர் செய்தியாளர்களிடம் ஞாயிற்றுக்கிழமை கூறியதாவது:

கூன்ட்டி மாவட்டம், காஸிரா என்ற கிராமத்துக்கு அருகே உள்ள அடர்ந்த வனப் பகுதியில் 4 இளைஞர்களை இந்திய மக்கள் விடுதலை முன்னணி (பிஎல்எஃப்ஐ) இயக்கத் தீவிரவாதிகள் சனிக்கிழமை இரவு சுட்டுக் கொன்றதாகத் தகவல் கிடைத்தது. அதன்பேரில், அந்த வனப் பகுதிக்கு ஞாயிற்றுக்கிழமை சென்று தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டோம். அப்போது, 3 இளைஞர்களின் சடலங்கள் கண்டெடுக்கப்பட்டன. அந்த 3 இளைஞர்களும் குற்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்தவர்கள். அந்தப் பகுதியில் யார் பலம் மிக்கவர் என்ற போட்டி ஏற்பட்டதன் காரணமாக அவர்கள் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. இந்தக் கொலை தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது என்று அந்த அதிகாரி தெரிவித்தார்.

மூலக்கதை