தமிழகத்துக்கு தண்ணீர் திறந்து விடவில்லை: நீர்வளத் துறை அமைச்சர் எம்.பி.பாட்டீல்
உச்ச நீதிமன்ற அறிவுறுத்தலின்பேரில், காவிரியில் தமிழகத்துக்கு தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளதாக வெளியான தகவலில் உண்மையில்லை என கர்நாடக நீர்வளத் துறை அமைச்சர் எம்.பி.பாட்டீல் விளக்கமளித்தார்.
"மேட்டூர் அணையில் உள்ள 39 டிஎம்சி தண்ணீர் அடுத்த ஒன்றரை மாதங்களுக்கு தமிழகத்தின் தேவையை நிறைவு செய்யும் என்பதால், தற்போதைக்கு காவிரியில் தண்ணீர் திறந்துவிட முடியாது' எனவும் அவர் குறிப்பிட்டார்.
சம்பா சாகுபடிக்கு காவிரியிலிருந்து 50.52 டிஎம்சி தண்ணீரை கர்நாடகம் திறந்துவிட உத்தரவிடுமாறு உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு தொடுத்த வழக்கு மீதான விசாரணை கடந்த செப்.2-ஆம் தேதி நடைபெற்றது. அப்போது, தமிழக மக்களின் நலனைக் கருத்தில் கொண்டு மனிதாபிமான அடிப்படையில் காவிரியிலிருந்து தண்ணீர் திறந்துவிடுவது குறித்து கர்நாடக அரசு பரிசீலிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியது.
இதுதொடர்பாக தில்லியில் செப்.3-ஆம் தேதி கர்நாடக தரப்பு மூத்த வழக்குரைஞர் ஃபாலி நாரிமனை முதல்வர் சித்தராமையா சந்தித்து ஆலோசனை நடத்தினார்.
இந்த நிலையில், காவிரியிலிருந்து தமிழகத்துக்கு கர்நாடகம் தண்ணீர் திறந்துவிட்டுள்ளதாக ஒருசில ஊடங்களில் செய்தி வெளியானது. இந்தத் தகவலை முழுமையாக மறுத்து, கர்நாடக நீர்வளத் துறை அமைச்சர் எம்.பி.பாட்டீல், தினமணி செய்தியாளரிடம் கூறியது:
கர்நாடகத்தில் தென்மேற்குப் பருவமழை எதிர்பார்த்த அளவில் பெய்யவில்லை. இதனால், காவிரி நதியின் குறுக்கே அமைந்துள்ள 4 அணைகளிலும் போதுமான நீர் இருப்பு இல்லை. கர்நாடக மக்களுக்கு குடிநீருக்கே போதுமான தண்ணீர் இல்லை. இந்த நிலையில், தமிழகத்துக்கு தண்ணீர் திறந்து விட்டுள்ளதாகக் கூறுவது சரியல்ல.
காவிரி விவகாரம் உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இந்த வழக்கு செப்.5-ஆம் தேதி விசாரணைக்கு வருகிறது. அப்போது கர்நாடகத்தின் நிலையை உச்ச நீதிமன்றத்தில் எடுத்துரைப்போம். தமிழகத்துக்கு தண்ணீர் திறந்துவிட இயலாத கர்நாடகத்தின் இயலாமையை, அணைகளின் நீர்மட்டம், கர்நாடகத்தின் பாசன மற்றும் குடிநீர்த் தேவை குறித்த விவரங்களை உச்ச நீதிமன்றத்தில் தெரிவிப்போம் என்றார்.




பூமியை நெருங்கும் வியாழன் கோள்..! வெறும் கண்களால் பார்க்கலாம்
சுவிட்சர்லாந்து: புத்தாண்டு கொண்டாட்டத்தில் வெடிவிபத்து - பலி எண்ணிக்கை 47ஆக உயர்வு
பாகிஸ்தானுடன் ரூ.6,196 கோடி மதிப்பிலான ஆயுத ஒப்பந்தத்திற்கு அமெரிக்கா ஒப்புதல்
சுற்றுலாவாசியின் தவறால்... சீனாவில் 1,500 ஆண்டுகள் பழமையான கோவிலில் தீ; வைரலான வீடியோ
ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்க திமுக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை - அன்புமணி குற்றச்சாட்டு
ஜல்லிக்கட்டில் வீரர்கள் உயிரிழந்தால் ரூ.10 லட்சம் நிவாரணம்: எடப்பாடி பழனிசாமி உறுதி
பெண்கள்தான் சமூகத்தின் முதுகெலும்பு: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
சோழன் எக்ஸ்பிரஸ் ரெயிலுக்கு கூடுதல் நிறுத்தம்
சேலம்: பராமரிப்பு பணி காரணமாக 3 ரெயில்கள் ரத்து
டி20 உலக கோப்பைக்கான தென் ஆப்பிரிக்க அணியில் மாற்றம்
பிக்பாஷ் லீக் தொடரில் இருந்து பாபர் அசாம் விலகல்
2026 டி20 உலகக்கோப்பை தொடர் குறித்து ரோகித் சர்மா நெகிழ்ச்சி பேட்டி
முதல் டி20 போட்டி: வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு அதிர்ச்சி அளித்த ஆப்கானிஸ்தான்
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: முதல் சுற்றில் மெத்வதேவ் வெற்றி
