விமானம் தாமதம்: இந்திய பாட்மிண்டன் வீரர்கள் தவிப்பு
விமானம் தாமதமானதால் இந்திய பாட்மிண்டன் வீரர், வீராங்கனைகள் தவிப்புக்கு ஆளாகினர்.
இந்தோனேசியா மாஸ்டர்ஸ் கிராண்ட் ஃப்ரீ பாட்மிண்டன் போட்டித் தொடர் அந்நாட்டின் பலிக்பாபன் நகரில் செவ்வாய்க்கிழமை முதல் தொடங்குகிறது. இதில் பங்கேற்க இந்தியாவின் எச்.எஸ். பிரணாய், சாய் பிரணீத், பி.சி.துளசி, சிரில் வெர்மா, ருத்விகா ஷிவானி ஆகியோர் விமானத்தில் ஹைதராபாதிலிருந்து கோலாலம்பூர் சென்று அங்கிருந்து மற்ற விமானங்கள் மூலம் ஜகார்த்தா- பலிக்பாபன் செல்ல பயணச்சீட்டுகளை முன்பதிவு செய்திருந்தனர்.
இந்நிலையில், மலேசியாவிலிருந்து கோலாலம்பூருக்கு முன்பதிவு செய்திருந்த மலேசிய ஏர்லைன்ஸ் நிறுவன விமானம், கோலாலம்பூருக்கு தாமதமாக வந்துசேர்ந்தது. இதனால், ஜகார்த்தா, பலிக்பாபன் இணைப்பு விமானங்களை அவர்கள் தவறவிட்டனர்.
இதுகுறித்து பிரணாய் கூறுகையில், "விமானம் தாமதத்தால் மலேசியா - ஜகார்த்தா, ஜகார்த்தா - பலிக்பன் செல்லும் இரு விமானங்களை நாங்கள் தவறவிட்டுவிட்டோம். இருப்பினும் அதிக கட்டணம் கொடுத்து வேறொரு விமானம் மூலம் இங்கு (ஜகார்த்தா) வந்தடைந்தோம். நல்லவேளையாக நாங்கள் பங்கேற்கும் போட்டி புதன்கிழமை தான் (செப்டம்பர் 7) நடைபெறுகிறது. ஒருவேளை முதல் நாளிலேயே போட்டி இருந்திருக்குமானால், நாங்கள் அங்கு செல்வதற்கு பதிலாக இப்படியே நாடு திரும்பியிருக்க வேண்டியிருக்கும். நல்லவேளை அப்படி எதுவும் நடக்கவில்லை' என்றார்.




பூமியை நெருங்கும் வியாழன் கோள்..! வெறும் கண்களால் பார்க்கலாம்
சுவிட்சர்லாந்து: புத்தாண்டு கொண்டாட்டத்தில் வெடிவிபத்து - பலி எண்ணிக்கை 47ஆக உயர்வு
பாகிஸ்தானுடன் ரூ.6,196 கோடி மதிப்பிலான ஆயுத ஒப்பந்தத்திற்கு அமெரிக்கா ஒப்புதல்
சுற்றுலாவாசியின் தவறால்... சீனாவில் 1,500 ஆண்டுகள் பழமையான கோவிலில் தீ; வைரலான வீடியோ
ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
காஷ்மீரில் கடும் பனிப்பொழிவு.. 50 விமானங்கள் ரத்து
திருப்பதியில் ஒருநாள் உண்டியல் காணிக்கை ரூ.3 கோடியே 69 லட்சம்
டெல்லி குடியரசு தினவிழாவில் கம்பீரமாக அணிவகுத்து சென்ற தமிழ்நாட்டு அலங்கார ஊர்தி
டெல்லி கடமை பாதையில் தேசியக்கொடி ஏற்றினார் ஜனாதிபதி திரவுபதி முர்மு
போர் வீரர்கள் நினைவிடத்தில் பிரதமர் மோடி மரியாதை
பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்க திமுக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை - அன்புமணி குற்றச்சாட்டு
ஜல்லிக்கட்டில் வீரர்கள் உயிரிழந்தால் ரூ.10 லட்சம் நிவாரணம்: எடப்பாடி பழனிசாமி உறுதி
பெண்கள்தான் சமூகத்தின் முதுகெலும்பு: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
சோழன் எக்ஸ்பிரஸ் ரெயிலுக்கு கூடுதல் நிறுத்தம்
சேலம்: பராமரிப்பு பணி காரணமாக 3 ரெயில்கள் ரத்து
