விஜய் மல்லையாவின் ரூ.6,630 கோடி மதிப்பிலான சொத்துகள் முடக்கம்
வங்கிகளிடம் இருந்து கடன் வாங்கிக் கொண்டு திரும்பச் செலுத்தாதது தொடர்பான வழக்கில் தொழிலதிபர் விஜய் மல்லையாவுக்கு சொந்தமான ரூ.6,630 கோடி மதிப்பிலான சொத்துகளை அமலாக்கத் துறை சனிக்கிழமை முடக்கியது.
இதுகுறித்து அமலாக்கத் துறை வட்டாரத் தகவல்கள் கூறியதாவது: ஐ.டி.பி.ஐ. வங்கியிடம் இருந்து ரூ.900 கோடி கடன் பெற்றுக் கொண்டு திரும்பச் செலுத்தாதது தொடர்பாக கிங்ஃபிஷர் நிறுவனம், அதன் அதிபர் விஜய் மல்லையா உள்ளிட்டோருக்கு எதிராக சட்டவிரோத பணப்பரிவர்த்தனை தடைச் சட்டத்தின் கீழ் அமலாக்கத் துறை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது.
இந்தச் சூழ்நிலையில், பாரத ஸ்டேட் வங்கி தலைமையிலான வங்கிகள் கூட்டமைப்பிடம் இருந்து ரூ.6,027 கோடி கடன் வாங்கி திரும்பச் செலுத்தாதது தொடர்பாக குற்றச்சதி, மோசடி உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் மல்லையா மீதும், கிங்ஃபிஷர், யுனைடெட் ப்ரிவரீஸ் ஆகிய நிறுவனங்களின் மீதும் சிபிஐ கடந்த மாதம் புதிய வழக்கைப் பதிவு செய்தது. இந்த விவகாரத்தையும் அமலாக்கத் துறை தனது விசாரணை வளையத்துக்குள் அண்மையில் கொண்டு வந்தது.
இந்நிலையில், விஜய் மல்லையாவுக்குச் சொந்தமாக மகாராஷ்டிரத்தின் அலிபாக்கில் உள்ள மாண்ட்வாவில் இருக்கும் ரூ.25 கோடி மதிப்பிலான பண்ணை வீடு, பெங்களூரில் இருக்கும் ரூ.565 கோடி மதிப்பிலான அடுக்குமாடிக் குடியிருப்பு, தனியார் வங்கியில் மல்லையாவின் ரூ.10 கோடி முதலீடுகள், யுஎஸ்எல், யுனைடெட் ப்ரிவரீஸ், மெக்டவல் ஹோல்டிங் ஆகிய நிறுவனங்களின் பங்குகளில் மல்லையாவுக்கு இருக்கும் முதலீடுகள், யூபிஹெச்எல் நிறுவனம், மல்லையாவின் கட்டுப்பாட்டில் இருக்கும் இதர நிறுவனங்கள் ஆகியவற்றை அமலாக்கத் துறை சனிக்கிழமை முடக்கியது. இவற்றின் மதிப்பு ரூ.3,635 கோடி ஆகும்.
இந்த சொத்துகளை முடக்குவதற்கான உத்தரவை சட்டவிரோத பணப்பரிவர்த்தனை தடுப்புச் சட்டத்தின் கீழ் அமலாக்கத் துறை சனிக்கிழமை பிறப்பித்தது. அந்த உத்தரவில், "இன்று முடக்கப்பட்டுள்ள சொத்துகளின் மதிப்பு ரூ.4,234.84 கோடி ஆகும். ஆனால் அவற்றின் சந்தை மதிப்பு ரூ.6,630 கோடி' என்று குறிப்பிடப்பட்டுள்ளது.




பூமியை நெருங்கும் வியாழன் கோள்..! வெறும் கண்களால் பார்க்கலாம்
சுவிட்சர்லாந்து: புத்தாண்டு கொண்டாட்டத்தில் வெடிவிபத்து - பலி எண்ணிக்கை 47ஆக உயர்வு
பாகிஸ்தானுடன் ரூ.6,196 கோடி மதிப்பிலான ஆயுத ஒப்பந்தத்திற்கு அமெரிக்கா ஒப்புதல்
சுற்றுலாவாசியின் தவறால்... சீனாவில் 1,500 ஆண்டுகள் பழமையான கோவிலில் தீ; வைரலான வீடியோ
ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்க திமுக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை - அன்புமணி குற்றச்சாட்டு
ஜல்லிக்கட்டில் வீரர்கள் உயிரிழந்தால் ரூ.10 லட்சம் நிவாரணம்: எடப்பாடி பழனிசாமி உறுதி
பெண்கள்தான் சமூகத்தின் முதுகெலும்பு: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
சோழன் எக்ஸ்பிரஸ் ரெயிலுக்கு கூடுதல் நிறுத்தம்
சேலம்: பராமரிப்பு பணி காரணமாக 3 ரெயில்கள் ரத்து
டி20 உலக கோப்பைக்கான தென் ஆப்பிரிக்க அணியில் மாற்றம்
பிக்பாஷ் லீக் தொடரில் இருந்து பாபர் அசாம் விலகல்
2026 டி20 உலகக்கோப்பை தொடர் குறித்து ரோகித் சர்மா நெகிழ்ச்சி பேட்டி
முதல் டி20 போட்டி: வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு அதிர்ச்சி அளித்த ஆப்கானிஸ்தான்
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: முதல் சுற்றில் மெத்வதேவ் வெற்றி
