இளம் வீரர்களை ஊக்கப்படுத்துகிறது டிஎன்பிஎல்
தமிழ்நாடு பிரீமியர் லீக் டி20 கிரிக்கெட் தொடர் இளம் வீரர்களை ஊக்கப்படுத்துவதாக உள்ளது என்றார் கிரிக்கெட் வீரர் எல்.பாலாஜி.
திருநெல்வேலி அருகே சங்கர்நகரில் உள்ள இந்தியா சிமென்ட்ஸ் கிரிக்கெட் மைதானத்தில் வெள்ளிக்கிழமை பயிற்சியில் ஈடுபட்ட இந்திய அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளரும், தூத்துக்குடி பேட்ரியாட்ஸ் அணி வீரருமான எல்.பாலாஜி செய்தியாளர்களிடம் கூறியதாவது:
சனிக்கிழமை (செப்.3) நடைபெறும் போட்டியில் தூத்துக்குடி அணியும், காரைக்குடி காளை அணியும் மோதுகின்றன. இந்த பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடர் இளம் வீரர்களை ஊக்கப்படுத்துவதாக அமைந்துள்ளது. எங்களது அணியில் அனைத்து வீரர்களும் வெற்றிக்காக கடுமையாக போராட தயாராக உள்ளனர்.
பேட்டிங், பெளலிங், பீல்டிங்கில் சிறப்பாகச் செயல்பட்டு வருகிறோம். எதிர்அணியை பற்றி கவலைப்படாமல், எங்களது ஆட்டத்தில் மட்டுமே கவனம் செலுத்த முடிவு செய்துள்ளோம். டி20 போட்டிகளைப் பொருத்தவரை, எதுவும் நடக்கலாம். சூழ்நிலைக்கு ஏற்ப வெற்றிக்கான முயற்சிகளை எடுப்போம் என்றார் அவர்.
காரைக்குடி அணி வீரர் பத்ரிநாத் கூறுகையில், ரஞ்சி கிரிக்கெட் போட்டி நடந்தபோது இந்த மைதானத்தில் விளையாடியுள்ளேன்.
அதனால் இந்த ஆடுகளம் பற்றி தெரியும். வரும் போட்டியில் வெற்றிபெற எங்களது அணி வீரர்கள் கடுமையாக உழைப்பார்கள். அதற்காக தீவிரமாக பயிற்சி மேற்கொண்டு வருகிறோம் என்றார்.




பாகிஸ்தானுடன் ரூ.6,196 கோடி மதிப்பிலான ஆயுத ஒப்பந்தத்திற்கு அமெரிக்கா ஒப்புதல்
சுற்றுலாவாசியின் தவறால்... சீனாவில் 1,500 ஆண்டுகள் பழமையான கோவிலில் தீ; வைரலான வீடியோ
ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
காதல் திருமண விவகாரம்; நெல்லை பத்திரப்பதிவு அலுவலகத்தில் இரு தரப்பினர் மோதல்
அரபிக் கடலில் துறைமுகம் அமைக்க பாகிஸ்தான் திட்டம்
கோவா தீ விபத்து சம்பவம்; விரிவான விசாரணை தேவை - ராகுல் காந்தி வலியுறுத்தல்
நடிகைக்கு ஆபாச படங்கள் அனுப்பி பாலியல் தொல்லை - தனியார் நிறுவன மேலாளர் கைது
விமானத்தின் அவசரகால கதவை திறக்க முயன்ற நபர்; பயணிகள் அதிர்ச்சி
யூடியூப்பில் விளம்பர இடையூறு இன்றி வீடியோ பார்க்க புதிய பிளான் அறிமுகம்
’ஓபன் செய்த உடன் ரீல்ஸ்’ இன்ஸ்டாகிராமில் வரும் சூப்பர் அப்டேட்
எடப்பாடி பழனிசாமியுடன் நயினார் நாகேந்திரன் சந்திப்பு
டிட்வா புயல்: 4 துறைமுகங்களில் 5-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு நீடிப்பு
சிவகாசியில் மனைவிக்கு வீட்டிலேயே 5 பிரசவங்கள் பார்த்த வடமாநில தொழிலாளி
மகளின் திருமணத்திற்காக வைத்திருந்த நகை, பணத்துடன் கள்ளக்காதலியுடன் ஓடிய வியாபாரி
காவிரி பாசன மாவட்டங்களில் உரத்தட்டுப்பாடு; நடவடிக்கை எடுக்க அரசுக்கு அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்
