இங்கிலாந்துக்கு 4-ஆவது வெற்றி
பாகிஸ்தானுக்கு எதிரான 4-ஆவது ஒரு நாள் கிரிக்கெட் ஆட்டத்தில் 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி கண்டது இங்கிலாந்து.
இதன்மூலம் 5 போட்டிகள் கொண்ட இந்தத் தொடரில் 4-0 என முன்னிலை பெற்றுள்ளது இங்கிலாந்து.
இங்கிலாந்தின் லீட்ஸ் நகரில் வியாழக்கிழமை நடைபெற்ற இந்த ஆட்டத்தில் டாஸ் வென்று முதலில் பேட் செய்த பாகிஸ்தான் 50 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 247 ரன்கள் குவித்தது. அந்த அணியில் அதிகபட்சமாக கேப்டன் அசார் அலி 80 ரன்களும், இமாத் வாசிம் ஆட்டமிழக்காமல் 57 ரன்களும் சேர்த்தனர்.
இங்கிலாந்து தரப்பில் ஆதில் ரஷித் 3 விக்கெட்டுகளையும், கிறிஸ் ஜோர்டான், மொயீன் அலி ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.
இங்கிலாந்து வெற்றி: பின்னர் ஆடிய இங்கிலாந்து அணியில் தொடக்க வீரர்களான ஜேசன் ராய் 14, அலெக்ஸ் ஹேல்ஸ் 8, பின்னர் வந்த ஜோ ரூட் 30, கேப்டன் இயோன் மோர்கன் 11 ரன்களில் ஆட்டமிழந்தனர். இதனால் 72 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது இங்கிலாந்து. ஆனால் 5-ஆவது விக்கெட்டுக்கு இணைந்த பென் ஸ்டோக்ஸ்-ஜானி பேர்ஸ்டோவ் ஜோடி 103 ரன்கள் குவிக்க, ஆட்டம் இங்கிலாந்து வசமானது. பென் ஸ்டோக்ஸ் 70 பந்துகளில் 2 சிக்ஸர், 6 பவுண்டரிகளுடன் 69, பேர்ஸ்டோவ் 83 பந்துகளில் 1 சிக்ஸர், 4 பவுண்டரிகளுடன் 61 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தனர்.
பின்னர் வந்த மொயீன் அலி 48 பந்துகளில் 2 சிக்ஸர், ஒரு பவுண்டரியுடன் 45 ரன்கள் விளாச, 48 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 252 ரன்கள் குவித்து வெற்றி கண்டது இங்கிலாந்து. பாகிஸ்தான் தரப்பில் முகமது இர்ஃபான் 2 விக்கெட் எடுத்தார்.
ஜானி பேர்ஸ்டோவ் ஆட்டநாயகனாகத் தேர்வு செய்யப்பட்டார்.




பூமியை நெருங்கும் வியாழன் கோள்..! வெறும் கண்களால் பார்க்கலாம்
சுவிட்சர்லாந்து: புத்தாண்டு கொண்டாட்டத்தில் வெடிவிபத்து - பலி எண்ணிக்கை 47ஆக உயர்வு
பாகிஸ்தானுடன் ரூ.6,196 கோடி மதிப்பிலான ஆயுத ஒப்பந்தத்திற்கு அமெரிக்கா ஒப்புதல்
சுற்றுலாவாசியின் தவறால்... சீனாவில் 1,500 ஆண்டுகள் பழமையான கோவிலில் தீ; வைரலான வீடியோ
ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
காஷ்மீரில் கடும் பனிப்பொழிவு.. 50 விமானங்கள் ரத்து
திருப்பதியில் ஒருநாள் உண்டியல் காணிக்கை ரூ.3 கோடியே 69 லட்சம்
டெல்லி குடியரசு தினவிழாவில் கம்பீரமாக அணிவகுத்து சென்ற தமிழ்நாட்டு அலங்கார ஊர்தி
டெல்லி கடமை பாதையில் தேசியக்கொடி ஏற்றினார் ஜனாதிபதி திரவுபதி முர்மு
போர் வீரர்கள் நினைவிடத்தில் பிரதமர் மோடி மரியாதை
பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்க திமுக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை - அன்புமணி குற்றச்சாட்டு
ஜல்லிக்கட்டில் வீரர்கள் உயிரிழந்தால் ரூ.10 லட்சம் நிவாரணம்: எடப்பாடி பழனிசாமி உறுதி
பெண்கள்தான் சமூகத்தின் முதுகெலும்பு: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
சோழன் எக்ஸ்பிரஸ் ரெயிலுக்கு கூடுதல் நிறுத்தம்
சேலம்: பராமரிப்பு பணி காரணமாக 3 ரெயில்கள் ரத்து
