மும்பை பங்குச் சந்தையில் 108 புள்ளிகள் அதிகரிப்பு
மும்பை பங்குச் சந்தையில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற வர்த்தகத்தில் சென்செக்ஸ் 108 புள்ளிகள் அதிகரித்தது.
வர்த்தகத்தின் தொடக்கத்தில் பங்குச் சந்தைகளில் மந்த நிலை காணப்பட்டது. பின்னர் முதலீட்டாளர்களின் ஆர்வத்தால் வியாழக்கிழமை ஏற்பட்ட பெரும் சரிவிலிருந்து தொலைத் தொடர்பு நிறுவனங்கள் மீண்டன.
ஆகஸ்ட் மாதத்தில் மோட்டார் வாகன விற்பனை சிறப்பாக இருந்ததையடுத்து, அத்துறை சார்ந்த நிறுவனப் பங்குகளுக்கு சந்தையில் அதிக தேவை காணப்பட்டது. மேலும், வங்கிப் பங்குகளும் முதலீட்டாளர்களிடம் வரவேற்பைப் பெற்றன.
அமெரிக்காவில் வேலைவாய்ப்பு குறித்த புள்ளிவிவரம் வெளியாவதையொட்டி சர்வதேச அளவில் முதலீட்டாளர்கள் பங்கு வர்த்தகத்தில் மிகுந்த எச்சரிக்கையுடன் ஈடுபட்டனர்.
மோட்டார் வாகனத் துறை பங்குகளின் விலை சராசரியாக 1.01% அதிகரித்தது. உள்கட்டமைப்பு, வீட்டு வசதி, மருந்து, மின்சாரம், வங்கி ஆகிய துறைகளைச் சேர்ந்த நிறுவனப் பங்குகளுக்கும் சந்தைகளில் ஓரளவுக்கு வரவேற்பு காணப்பட்டது.
இருப்பினும், உலோகம், தகவல் தொழில்நுட்பம், பொறியியல் ஆகிய துறை நிறுவனப் பங்குகளின் விலை சரிவைக் கண்டன.
அதானி போர்ட்ஸ் பங்கின் விலை அதிகபட்சமாக 3.55% உயர்ந்தது. அதேசமயம், கோல் இந்தியா நிறுவனப் பங்கின் விலை 1.64% வீழ்ச்சி கண்டது.
மும்பை பங்குச் சந்தையில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற வர்த்தகத்தில் சென்செக்ஸ் 108 புள்ளிகள் அதிகரித்து 28,532 புள்ளிகளாக நிலைத்தது. கடந்த ஆண்டு ஏப்ரல் 16-ஆம் தேதிக்குப் பிறகு காணப்படும் அதிகபட்ச ஏற்றம் இதுவாகும்.
தேசிய பங்குச் சந்தையில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற வர்த்தகத்தில் நிஃப்டி 35 புள்ளிகள் உயர்ந்து 8,809 புள்ளிகளாக நிலைத்தது. கடந்த ஆண்டு ஏப்ரல் 13-ஆம் தேதிக்குப் பிறகு நிஃப்டி 8,800 புள்ளிகளைக் கடந்தது இதுவே முதல் முறையாகும்.




பூமியை நெருங்கும் வியாழன் கோள்..! வெறும் கண்களால் பார்க்கலாம்
சுவிட்சர்லாந்து: புத்தாண்டு கொண்டாட்டத்தில் வெடிவிபத்து - பலி எண்ணிக்கை 47ஆக உயர்வு
பாகிஸ்தானுடன் ரூ.6,196 கோடி மதிப்பிலான ஆயுத ஒப்பந்தத்திற்கு அமெரிக்கா ஒப்புதல்
சுற்றுலாவாசியின் தவறால்... சீனாவில் 1,500 ஆண்டுகள் பழமையான கோவிலில் தீ; வைரலான வீடியோ
ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
காஷ்மீரில் கடும் பனிப்பொழிவு.. 50 விமானங்கள் ரத்து
திருப்பதியில் ஒருநாள் உண்டியல் காணிக்கை ரூ.3 கோடியே 69 லட்சம்
டெல்லி குடியரசு தினவிழாவில் கம்பீரமாக அணிவகுத்து சென்ற தமிழ்நாட்டு அலங்கார ஊர்தி
டெல்லி கடமை பாதையில் தேசியக்கொடி ஏற்றினார் ஜனாதிபதி திரவுபதி முர்மு
போர் வீரர்கள் நினைவிடத்தில் பிரதமர் மோடி மரியாதை
பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்க திமுக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை - அன்புமணி குற்றச்சாட்டு
ஜல்லிக்கட்டில் வீரர்கள் உயிரிழந்தால் ரூ.10 லட்சம் நிவாரணம்: எடப்பாடி பழனிசாமி உறுதி
பெண்கள்தான் சமூகத்தின் முதுகெலும்பு: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
சோழன் எக்ஸ்பிரஸ் ரெயிலுக்கு கூடுதல் நிறுத்தம்
சேலம்: பராமரிப்பு பணி காரணமாக 3 ரெயில்கள் ரத்து
