22,000 கார்களை திரும்பப் பெறுகிறது ஜெனரல் மோட்டார்ஸ்
ஜெனரல் மோட்டார் இந்தியா நிறுவனம் அதன் ஷெவர்லே க்ரூஸ் கார்களில் உள்ள உதிரிபாக குறைபாடுகளை சரி செய்து தருவதற்காக 22,000 கார்களை திரும்பப் பெறுவதாக அறிவித்துள்ளது.
இதுகுறித்து அந்த நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
கடந்த 2009-ஆம் ஆண்டு முதல் 2011 வரையில் தயாரித்து விற்பனை செய்யப்பட்ட ஷெவர்லே க்ரூஸ் வகை கார்களில் இக்னிஷன் அமைப்பில் குறைபாடு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
இதையடுத்து, அந்தக் கோளாறை சரிசெய்து தருவதற்காக 22,000 கார்களை திரும்பப் பெற ஜெனரல் மோட்டார்ஸ் முடிவு செய்துள்ளது. எனவே, வாடிக்கையாளர்கள் முன்னரே பதிவு செய்து கொண்டு, அருகில் உள்ள ஷெவர்லே சேவை மையங்களுக்குச் சென்று தங்களது காரை ஆய்வுக்குட்படுத்தி, பழுதான பாகங்களை இலவசமாக மாற்றிக் கொள்ளலாம் என ஜெனரஸ் மோட்டார்ஸ் இந்தியா நிறுவனம் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளது.




பூமியை நெருங்கும் வியாழன் கோள்..! வெறும் கண்களால் பார்க்கலாம்
சுவிட்சர்லாந்து: புத்தாண்டு கொண்டாட்டத்தில் வெடிவிபத்து - பலி எண்ணிக்கை 47ஆக உயர்வு
பாகிஸ்தானுடன் ரூ.6,196 கோடி மதிப்பிலான ஆயுத ஒப்பந்தத்திற்கு அமெரிக்கா ஒப்புதல்
சுற்றுலாவாசியின் தவறால்... சீனாவில் 1,500 ஆண்டுகள் பழமையான கோவிலில் தீ; வைரலான வீடியோ
ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
காஷ்மீரில் கடும் பனிப்பொழிவு.. 50 விமானங்கள் ரத்து
திருப்பதியில் ஒருநாள் உண்டியல் காணிக்கை ரூ.3 கோடியே 69 லட்சம்
டெல்லி குடியரசு தினவிழாவில் கம்பீரமாக அணிவகுத்து சென்ற தமிழ்நாட்டு அலங்கார ஊர்தி
டெல்லி கடமை பாதையில் தேசியக்கொடி ஏற்றினார் ஜனாதிபதி திரவுபதி முர்மு
போர் வீரர்கள் நினைவிடத்தில் பிரதமர் மோடி மரியாதை
பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்க திமுக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை - அன்புமணி குற்றச்சாட்டு
ஜல்லிக்கட்டில் வீரர்கள் உயிரிழந்தால் ரூ.10 லட்சம் நிவாரணம்: எடப்பாடி பழனிசாமி உறுதி
பெண்கள்தான் சமூகத்தின் முதுகெலும்பு: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
சோழன் எக்ஸ்பிரஸ் ரெயிலுக்கு கூடுதல் நிறுத்தம்
சேலம்: பராமரிப்பு பணி காரணமாக 3 ரெயில்கள் ரத்து
