இறந்துவிட்டதாக "வாட்ஸ் ஆப்' மூலம் வதந்தி: போலீஸில் பட்டிமன்றப் பேச்சாளர் லியோனி புகார்
இறந்து விட்டதாக கட்செவி அஞ்சல் (வாட்ஸ் ஆப்) மூலம் வதந்தி பரப்புவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி பிரபல பட்டிமன்ற பேச்சாளர் லியோனி சென்னை பெருநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் வியாழக்கிழமை புகார் மனு அளித்தார்.
இது குறித்து அவர் அளித்த புகார் மனுவில், மேலும் கூறப்பட்டிருப்பதாவது:
நான் பட்டிமன்ற பேச்சாளராகவும், திமுக கலை இலக்கிய பகுத்தறிவு பேரவையின் மாநில துணைச் செயலராகவும் இருந்து வருகிறேன். இதற்கிடையே கடந்த மாதம் 27-ஆம் தேதி என்னுடைய நண்பர் இனிகோ இருதயராஜ், என்னை செல்லிடப்பேசி மூலம் தொடர்பு கொண்டு பேசினார்.
அப்போது அவர், நான் இறந்துவிட்டதாக கட்செவி அஞ்சலில் வதந்தி பரவுதாக தெரிவித்தார். மேலும் கட்செவி அஞ்சலில் பரவும், அந்த தகவலையும் எனக்கு அனுப்பினார். அதில் திமுக பேச்சாளர் லியோனி, புதுக்கோட்டை அருகே சாலை விபத்தில் பலி என குறிப்பிடப்பட்டிருந்தது.
அதைப் பார்த்து நான் மிகவும் அதிர்ச்சியடைந்தேன். இதனால் எனது இயல்பு வாழக்கை பாதிக்கப்பட்டு, மன உளைச்சலில் இருந்து வருகிறேன். இதற்கிடையே உறவினர்கள், நண்பர்கள், எனது ரசிகர்கள் ஆகியோர் என்னை செல்லிடப்பேசி மூலம் கடந்த 4 நாள்களாக தொடர்பு கொண்டு, கட்செவி அஞ்சல் மூலம் பரவும் வதந்தி குறித்து கேட்டு வருகின்றனர்.
எனவே கட்செவி அஞ்சலில் நான் இறந்து விட்டதாக வதந்தியைப் பரப்பும் நபர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.




பூமியை நெருங்கும் வியாழன் கோள்..! வெறும் கண்களால் பார்க்கலாம்
சுவிட்சர்லாந்து: புத்தாண்டு கொண்டாட்டத்தில் வெடிவிபத்து - பலி எண்ணிக்கை 47ஆக உயர்வு
பாகிஸ்தானுடன் ரூ.6,196 கோடி மதிப்பிலான ஆயுத ஒப்பந்தத்திற்கு அமெரிக்கா ஒப்புதல்
சுற்றுலாவாசியின் தவறால்... சீனாவில் 1,500 ஆண்டுகள் பழமையான கோவிலில் தீ; வைரலான வீடியோ
ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
காஷ்மீரில் கடும் பனிப்பொழிவு.. 50 விமானங்கள் ரத்து
திருப்பதியில் ஒருநாள் உண்டியல் காணிக்கை ரூ.3 கோடியே 69 லட்சம்
டெல்லி குடியரசு தினவிழாவில் கம்பீரமாக அணிவகுத்து சென்ற தமிழ்நாட்டு அலங்கார ஊர்தி
டெல்லி கடமை பாதையில் தேசியக்கொடி ஏற்றினார் ஜனாதிபதி திரவுபதி முர்மு
போர் வீரர்கள் நினைவிடத்தில் பிரதமர் மோடி மரியாதை
பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்க திமுக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை - அன்புமணி குற்றச்சாட்டு
ஜல்லிக்கட்டில் வீரர்கள் உயிரிழந்தால் ரூ.10 லட்சம் நிவாரணம்: எடப்பாடி பழனிசாமி உறுதி
பெண்கள்தான் சமூகத்தின் முதுகெலும்பு: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
சோழன் எக்ஸ்பிரஸ் ரெயிலுக்கு கூடுதல் நிறுத்தம்
சேலம்: பராமரிப்பு பணி காரணமாக 3 ரெயில்கள் ரத்து
