நடிகர் அருண் விஜய் ஏற்படுத்திய கார் விபத்து: விசாரணை அதிகாரி ரயில்வே காவல் துறைக்கு மாற்றம்
சென்னை நுங்கம்பாக்கத்தில் நடிகர் அருண் விஜய் ஏற்படுத்திய கார் விபத்து வழக்கின் விசாரணை அதிகாரி, ரயில்வே காவல்துறைக்கு திங்கள்கிழமை மாற்றப்பட்டார்.
இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது: தமிழ்த் திரைப்பட நடிகர் விஜயகுமாரின் மகன் அருண் விஜய், கடந்த சனிக்கிழமை அதிகாலை நுங்கம்பாக்கத்தில் இருந்து காரில் வீட்டுக்கு திரும்பி வந்து கொண்டிருந்தார். அவர் நுங்கம்பாக்கம் காவல் நிலையம் அருகே வரும்போது, அங்கு நின்றுகொண்டிருந்த காவல்துறை வேன் மீது அருண் விஜய் கார் மோதியது.
அருண் விஜய் அதிக மதுபோதையில் காரை ஓட்டியதாலேயே விபத்து ஏற்பட்டிருப்பது விசாரணையில் தெரியவந்தது. இது குறித்து பாண்டி பஜார் போக்குவரத்து புலனாய்வுப் பிரிவு ஆய்வாளர் சதீஷ் வழக்குப் பதிவு செய்து, விசாரணை மேற்கொண்டார்.
இந்த வழக்கில் அருண் விஜய் தலைமறைவாக இருந்து வருகிறார். இதற்கிடையே அருண் விஜய்யின் காரை போலீஸார் ஞாயிற்றுக்கிழமை பறிமுதல் செய்தனர். இந்நிலையில் வழக்கின் விசாரணை அதிகாரியாக இருந்த ஆய்வாளர் சதீஷை திடீரென ரயில்வே காவல்துறைக்கு மாற்றி டி.ஜி.பி. அசோக்குமார் திங்கள்கிழமை உத்தரவிட்டார்.
இதேபோல போக்குவரத்துப் புலனாய்வு பிரிவு உதவி ஆணையர் ஜெகதீஷ் மீதும் துறைரீதியான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக காவல் துறை வட்டாரங்கள் தெரிவித்தன. இரு அதிகாரிகள் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட்டதன் காரணத்தை காவல்துறை அதிகாரிகள் கூற மறுத்துவிட்டனர்.
இந்த நடவடிக்கை பெருநகர காவல்துறை அதிகாரிகளிடமும், போலீஸாரிடமும் பரபரப்பை ஏற்படுத்தியது.




பூமியை நெருங்கும் வியாழன் கோள்..! வெறும் கண்களால் பார்க்கலாம்
சுவிட்சர்லாந்து: புத்தாண்டு கொண்டாட்டத்தில் வெடிவிபத்து - பலி எண்ணிக்கை 47ஆக உயர்வு
பாகிஸ்தானுடன் ரூ.6,196 கோடி மதிப்பிலான ஆயுத ஒப்பந்தத்திற்கு அமெரிக்கா ஒப்புதல்
சுற்றுலாவாசியின் தவறால்... சீனாவில் 1,500 ஆண்டுகள் பழமையான கோவிலில் தீ; வைரலான வீடியோ
ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
காஷ்மீரில் கடும் பனிப்பொழிவு.. 50 விமானங்கள் ரத்து
திருப்பதியில் ஒருநாள் உண்டியல் காணிக்கை ரூ.3 கோடியே 69 லட்சம்
டெல்லி குடியரசு தினவிழாவில் கம்பீரமாக அணிவகுத்து சென்ற தமிழ்நாட்டு அலங்கார ஊர்தி
டெல்லி கடமை பாதையில் தேசியக்கொடி ஏற்றினார் ஜனாதிபதி திரவுபதி முர்மு
போர் வீரர்கள் நினைவிடத்தில் பிரதமர் மோடி மரியாதை
பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்க திமுக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை - அன்புமணி குற்றச்சாட்டு
ஜல்லிக்கட்டில் வீரர்கள் உயிரிழந்தால் ரூ.10 லட்சம் நிவாரணம்: எடப்பாடி பழனிசாமி உறுதி
பெண்கள்தான் சமூகத்தின் முதுகெலும்பு: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
சோழன் எக்ஸ்பிரஸ் ரெயிலுக்கு கூடுதல் நிறுத்தம்
சேலம்: பராமரிப்பு பணி காரணமாக 3 ரெயில்கள் ரத்து
