ஒரு கோடி மரங்களை நட என்.டி.பி.சி. திட்டம்
பொதுத் துறை நிறுவனமான என்.டி.பி.சி. நடப்பு நிதி ஆண்டில் 1 கோடி மரங்களை நட திட்டமிட்டுள்ளது.
இதுகுறித்து அந்த நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:
காடு வளர்ப்புத் திட்டத்தின் கீழ் என்.டி.பி.சி. நிறுவனம் நடப்பு நிதி ஆண்டில் 1 கோடி மரங்களை நட திட்டமிட்டுள்ளது. மத்திய பிரதேசம், பிகார், அஸ்ஸாம், கர்நாடகம், ஆந்திரம், தெலுங்கானா மற்றும் மஹாராஷ்டிரம் ஆகிய மாநிலங்களில் மரங்களை நட முடிவு செய்யப்பட்டுள்ளது.
இதற்காக, பிகார், அஸ்ஸாம், மத்திய பிரதேசம், கர்நாடகம் ஆகிய மாநிலங்களின் வனத் துறையிடம் என்.டி.பி.சி நிறுவனம் ஏற்கெனவே புரிந்துணர்வு ஒப்பந்தங்களை மேற்கொண்டுள்ளது.
எஞ்சியுள்ள மாநில வனத் துறையிடம் விரைவில் ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆகஸ்ட் 27-ஆம் தேதி கர்நாடக வனத்துறையிடம் செய்து கொண்ட ஒப்பந்தத்தின்படி பெங்களூருவில் மட்டும் 5,32,950 மரங்கள் நடப்பட உள்ளன என்று என்.டி.பி.சி. அந்த செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளது.




பூமியை நெருங்கும் வியாழன் கோள்..! வெறும் கண்களால் பார்க்கலாம்
சுவிட்சர்லாந்து: புத்தாண்டு கொண்டாட்டத்தில் வெடிவிபத்து - பலி எண்ணிக்கை 47ஆக உயர்வு
பாகிஸ்தானுடன் ரூ.6,196 கோடி மதிப்பிலான ஆயுத ஒப்பந்தத்திற்கு அமெரிக்கா ஒப்புதல்
சுற்றுலாவாசியின் தவறால்... சீனாவில் 1,500 ஆண்டுகள் பழமையான கோவிலில் தீ; வைரலான வீடியோ
ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
காஷ்மீரில் கடும் பனிப்பொழிவு.. 50 விமானங்கள் ரத்து
திருப்பதியில் ஒருநாள் உண்டியல் காணிக்கை ரூ.3 கோடியே 69 லட்சம்
டெல்லி குடியரசு தினவிழாவில் கம்பீரமாக அணிவகுத்து சென்ற தமிழ்நாட்டு அலங்கார ஊர்தி
டெல்லி கடமை பாதையில் தேசியக்கொடி ஏற்றினார் ஜனாதிபதி திரவுபதி முர்மு
போர் வீரர்கள் நினைவிடத்தில் பிரதமர் மோடி மரியாதை
பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்க திமுக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை - அன்புமணி குற்றச்சாட்டு
ஜல்லிக்கட்டில் வீரர்கள் உயிரிழந்தால் ரூ.10 லட்சம் நிவாரணம்: எடப்பாடி பழனிசாமி உறுதி
பெண்கள்தான் சமூகத்தின் முதுகெலும்பு: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
சோழன் எக்ஸ்பிரஸ் ரெயிலுக்கு கூடுதல் நிறுத்தம்
சேலம்: பராமரிப்பு பணி காரணமாக 3 ரெயில்கள் ரத்து
