பங்குச் சந்தைகளில் திடீர் ஏற்றம்
இரண்டு வர்த்தக தினங்களாக சரிவைக் கண்ட இந்திய பங்குச் சந்தைகள் திங்கள்கிழமை திடீர் ஏற்றம் கண்டன.
அமெரிக்க மத்திய வங்கி வட்டி விகிதங்களை உயர்த்தும்பட்சத்தில், இந்தியா உள்ளிட்ட வளரும் நாடுகளின் பங்குச் சந்தைகளிலிருந்து அதிக அளவில் அன்னிய முதலீடு வெளியேறும் என்ற நிலைப்பாட்டால் இரண்டு வர்த்தக தினங்களாக பங்குச் சந்தைகளில் சுணக்க நிலை நிலவியது.
இந்த நிலையில், திங்கள்கிழமை காலையில் வர்த்தகம் தொடங்கிய போதும் பங்குச் சந்தைகளில் மந்த நிலை நீடித்ததது. பிற்பகலில் முதலீட்டாளர்கள் மோட்டார் வாகனம், மற்றும் பொறியியல் பொருட்கள் துறைகளைச் சேர்ந்த நிறுவனப் பங்குகளை அதிக அளவில் வாங்கியதை அடுத்து பங்குச் சந்தைகள் சரிவிலிருந்து மீண்டன.
மோட்டார் வாகனத் துறை பங்குகளின் விலை சராசரியாக 1.44 சதவீதம் அதிகரித்தது. பொறியியல் துறை பங்குகளின் விலை 1.17 சதவீதமும், உலோக துறை பங்குகளின் விலை 1.07 சதவீதமும் உயர்ந்தன. எண்ணெய்-எரிவாயு,வங்கி, நுகர்வோர் சாதன துறைகளைச் சேர்ந்த நிறுவனப் பங்குகளும் முதலீட்டாளர்களிடம் ஓரளவுக்கு வரவேற்பை பெற்றன.
டாடா மோட்டார்ஸ் பங்கின் விலை அதிகபட்சமாக 4.18 சதவீதம் உயர்ந்தது. இதையடுத்து, ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் (2.85%), ஹீரோ மோட்டோகார்ப் (2.81%), ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கி (2.06%),
எல் & டி (1.99%), அதானி போர்ட்ஸ் (2.31%) ஆகிய நிறுவனங்களின் பங்குகளின் விலையும் கணிசமான அளவுக்கு அதிகரித்தன. இருப்பினும், தகவல் தொழில்நுட்ப துறையைச் சேர்ந்த விப்ரோ மற்றும் டி.சி.எஸ். பங்குகளின் விலை 2.33 சதவீதம் வரை சரிவைக் கண்டன. மும்பை பங்குச் சந்தையில் திங்கள்கிழமை நடைபெற்ற வர்த்தகத்தில் சென்செக்ஸ் 120 புள்ளிகள் அதிகரித்து 27,902 புள்ளிகளாக நிலைத்தது. தேசிய பங்குச் சந்தையில் திங்கள்கிழமை நடைபெற்ற வர்த்தகத்தில் நிஃப்டி 34 புள்ளிகள் உயர்ந்து 8,607 புள்ளிகளாக நிலைத்தது.




பூமியை நெருங்கும் வியாழன் கோள்..! வெறும் கண்களால் பார்க்கலாம்
சுவிட்சர்லாந்து: புத்தாண்டு கொண்டாட்டத்தில் வெடிவிபத்து - பலி எண்ணிக்கை 47ஆக உயர்வு
பாகிஸ்தானுடன் ரூ.6,196 கோடி மதிப்பிலான ஆயுத ஒப்பந்தத்திற்கு அமெரிக்கா ஒப்புதல்
சுற்றுலாவாசியின் தவறால்... சீனாவில் 1,500 ஆண்டுகள் பழமையான கோவிலில் தீ; வைரலான வீடியோ
ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
காஷ்மீரில் கடும் பனிப்பொழிவு.. 50 விமானங்கள் ரத்து
திருப்பதியில் ஒருநாள் உண்டியல் காணிக்கை ரூ.3 கோடியே 69 லட்சம்
டெல்லி குடியரசு தினவிழாவில் கம்பீரமாக அணிவகுத்து சென்ற தமிழ்நாட்டு அலங்கார ஊர்தி
டெல்லி கடமை பாதையில் தேசியக்கொடி ஏற்றினார் ஜனாதிபதி திரவுபதி முர்மு
போர் வீரர்கள் நினைவிடத்தில் பிரதமர் மோடி மரியாதை
பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்க திமுக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை - அன்புமணி குற்றச்சாட்டு
ஜல்லிக்கட்டில் வீரர்கள் உயிரிழந்தால் ரூ.10 லட்சம் நிவாரணம்: எடப்பாடி பழனிசாமி உறுதி
பெண்கள்தான் சமூகத்தின் முதுகெலும்பு: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
சோழன் எக்ஸ்பிரஸ் ரெயிலுக்கு கூடுதல் நிறுத்தம்
சேலம்: பராமரிப்பு பணி காரணமாக 3 ரெயில்கள் ரத்து
