மதுபோதையில் கார் ஓட்டியதாக நடிகர் அருண் விஜய் மீது வழக்கு
குடிபோதையில் கார் ஓட்டி போலீஸ் வாகனத்தில் மோதியதாக பிரபல திரைப்பட நடிகர் அருண் விஜய் மீது பாண்டி பஜார் போக்குவரத்து போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
நடிகர் விஜயகுமாரின் மகனும், நடிகருமான அருண் விஜய், சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள பிரபல நட்சத்திர ஹோட்டலில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளார்.
நிகழ்ச்சி முடிந்து நள்ளிரவுக்கு பின், தனது ஆடி காரில் அவர் வீடு திரும்பி கொண்டிருந்தபோது, நுங்கம்பாக்கம் காவல் நிலையத்தின் எதிரே நின்று கொண்டிருந்த போலீஸ் வாகனத்தின் மீது மோதியதாகக் கூறப்படுகிறது.
காரில் போதிய பாதுகாப்பு அம்சங்கள் இருந்ததால் அருண் விஜய் காயங்களின்றி தப்பினார். இருப்பினும் இந்த விபத்தில் போலீஸ் வாகனம் சேதமடைந்தது. மற்ற யாருக்கும் காயம் எதுவும் ஏற்படவில்லை.
அருண் விஜய் குடிபோதையில் காரை ஓட்டி வந்ததாக விசாரணையில் தெரிய வந்தது. இதையடுத்து அவர் மீது, பாண்டி பஜார் போக்குவரத்து புலனாய்வுப் பிரிவு போலீஸார், மோட்டார் வாகனச் சட்டத்தின் 185-ஆவது பிரிவு மற்றும் இந்திய தண்டனைச் சட்டத்தின் 279 -ஆவது பிரிவு ஆகியவற்றின்கீழ் வழக்குப்பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.




பூமியை நெருங்கும் வியாழன் கோள்..! வெறும் கண்களால் பார்க்கலாம்
சுவிட்சர்லாந்து: புத்தாண்டு கொண்டாட்டத்தில் வெடிவிபத்து - பலி எண்ணிக்கை 47ஆக உயர்வு
பாகிஸ்தானுடன் ரூ.6,196 கோடி மதிப்பிலான ஆயுத ஒப்பந்தத்திற்கு அமெரிக்கா ஒப்புதல்
சுற்றுலாவாசியின் தவறால்... சீனாவில் 1,500 ஆண்டுகள் பழமையான கோவிலில் தீ; வைரலான வீடியோ
ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
காஷ்மீரில் கடும் பனிப்பொழிவு.. 50 விமானங்கள் ரத்து
திருப்பதியில் ஒருநாள் உண்டியல் காணிக்கை ரூ.3 கோடியே 69 லட்சம்
டெல்லி குடியரசு தினவிழாவில் கம்பீரமாக அணிவகுத்து சென்ற தமிழ்நாட்டு அலங்கார ஊர்தி
டெல்லி கடமை பாதையில் தேசியக்கொடி ஏற்றினார் ஜனாதிபதி திரவுபதி முர்மு
போர் வீரர்கள் நினைவிடத்தில் பிரதமர் மோடி மரியாதை
பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்க திமுக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை - அன்புமணி குற்றச்சாட்டு
ஜல்லிக்கட்டில் வீரர்கள் உயிரிழந்தால் ரூ.10 லட்சம் நிவாரணம்: எடப்பாடி பழனிசாமி உறுதி
பெண்கள்தான் சமூகத்தின் முதுகெலும்பு: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
சோழன் எக்ஸ்பிரஸ் ரெயிலுக்கு கூடுதல் நிறுத்தம்
சேலம்: பராமரிப்பு பணி காரணமாக 3 ரெயில்கள் ரத்து
