கார் ஓட்டி விபத்து ஏற்படுத்திய வழக்கில் சல்மான் கான் கேவியெட் மனு தாக்கல்
கார் ஓட்டி விபத்து ஏற்படுத்திய வழக்கில் நடிகர் சல்மான் கான் உச்சநீதிமன்றத்தில் கேவியெட் மனு தாக்கல் செய்துள்ளார்.
கடந்த 2002 ஆம் ஆண்டு மும்பையின் பாந்ரா பகுதியில் பாலிவுட் நடிகர் சல்மான் கான் குடிபோதையில் காரை ஓட்டி நடைபாதையில் துாங்கிக் கொண்டிருந்தவர்கள் மீது மோதி விபத்தை ஏற்படுத்தியதாக அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
வழக்கின் விசாரணை முடிவில் சல்மான்கானுக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனையும், 25,000 ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டது. இதனை எதிர்த்து, மும்பை உயர்நீதிமன்றத்தில் சல்மான்கான் தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கில் கடந்த டிசம்பர் 10 ஆம் தேதி அவரை விடுவிப்பதாக தீர்ப்பு வழங்கப்பட்டது.
மும்பை உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மஹாராஸ்டிரா அரசு, கடந்த 23 ஆம் தேதி மேல் முறையீடு செய்துள்ளது. இந்நிலையில் இந்த வழக்கில் உத்தரவு பிறப்பிக்கும் முன்னர் தம்மிடமும் கருத்து கேட்க வேண்டும் என கோரி உச்சநீதிமன்றத்தில் சல்மான் கான் இன்று கேவியட் மனுவினை தாக்கல் செய்துள்ளார்.




பூமியை நெருங்கும் வியாழன் கோள்..! வெறும் கண்களால் பார்க்கலாம்
சுவிட்சர்லாந்து: புத்தாண்டு கொண்டாட்டத்தில் வெடிவிபத்து - பலி எண்ணிக்கை 47ஆக உயர்வு
பாகிஸ்தானுடன் ரூ.6,196 கோடி மதிப்பிலான ஆயுத ஒப்பந்தத்திற்கு அமெரிக்கா ஒப்புதல்
சுற்றுலாவாசியின் தவறால்... சீனாவில் 1,500 ஆண்டுகள் பழமையான கோவிலில் தீ; வைரலான வீடியோ
ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்க திமுக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை - அன்புமணி குற்றச்சாட்டு
ஜல்லிக்கட்டில் வீரர்கள் உயிரிழந்தால் ரூ.10 லட்சம் நிவாரணம்: எடப்பாடி பழனிசாமி உறுதி
பெண்கள்தான் சமூகத்தின் முதுகெலும்பு: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
சோழன் எக்ஸ்பிரஸ் ரெயிலுக்கு கூடுதல் நிறுத்தம்
சேலம்: பராமரிப்பு பணி காரணமாக 3 ரெயில்கள் ரத்து
டி20 உலக கோப்பைக்கான தென் ஆப்பிரிக்க அணியில் மாற்றம்
பிக்பாஷ் லீக் தொடரில் இருந்து பாபர் அசாம் விலகல்
2026 டி20 உலகக்கோப்பை தொடர் குறித்து ரோகித் சர்மா நெகிழ்ச்சி பேட்டி
முதல் டி20 போட்டி: வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு அதிர்ச்சி அளித்த ஆப்கானிஸ்தான்
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: முதல் சுற்றில் மெத்வதேவ் வெற்றி
