சிசோடியாவின் வீட்டின் முன் குப்பைகளை கொட்டிய துப்புரவு பணியாளர்கள்
நான்கு மாதங்களாக ஊதியம் வழங்காததைக் கண்டித்து, வேலை நிறுத்தம் செய்துவரும் டெல்லி மாநகராட்சி துப்புரவு பணியாளர்கள், அம்மாநில துணை முதலமைச்சர் சிசோடியாவின் வீட்டின் முன் குப்பைகளை கொட்டி இன்று போராட்டம் நடத்தினர்.
தலைநகர் டெல்லி 3 மாநகராட்சிகளாக பிரிக்கப்பட்டு நிர்வகிக்கப்படுகிறது. இங்கு பணியாற்றும் துப்புரவு பணியாளர்கள், சுகாதாரத்துறை அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு கடந்த 4 மாதங்களாக ஊதியம் வழங்கப்படவில்லை என கூறப்படுகிறது.
3 மாநகராட்சியும் பாரதிய ஜனதா கட்சியின் வசம் உள்ளதால், கெஜ்ரிவால் அரசு பழிவாங்கும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருவதாக, பாதிக்கப்பட்ட பணியாளர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
இந்நிலையில், ஊதியம் வழங்காததைக்கண்டித்து, டெல்லி துணை முதலமைச்சர் சிசோடியாவின் வீட்டின் முன்பு குப்பைகளை கொட்டி, துப்புரவு பணியாளர்கள் இன்று போராட்டம் நடத்தினர்.
உடனடியாக சம்பளம் அளிக்காவிட்டால், டெல்லி மாநகராட்சியில் பணிபுரியும் 13,000 ஊழியர்களும் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட திட்டமிட்டுள்ளதாகவும் அவர்கள் எச்சரித்தனர்.




பூமியை நெருங்கும் வியாழன் கோள்..! வெறும் கண்களால் பார்க்கலாம்
சுவிட்சர்லாந்து: புத்தாண்டு கொண்டாட்டத்தில் வெடிவிபத்து - பலி எண்ணிக்கை 47ஆக உயர்வு
பாகிஸ்தானுடன் ரூ.6,196 கோடி மதிப்பிலான ஆயுத ஒப்பந்தத்திற்கு அமெரிக்கா ஒப்புதல்
சுற்றுலாவாசியின் தவறால்... சீனாவில் 1,500 ஆண்டுகள் பழமையான கோவிலில் தீ; வைரலான வீடியோ
ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்க திமுக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை - அன்புமணி குற்றச்சாட்டு
ஜல்லிக்கட்டில் வீரர்கள் உயிரிழந்தால் ரூ.10 லட்சம் நிவாரணம்: எடப்பாடி பழனிசாமி உறுதி
பெண்கள்தான் சமூகத்தின் முதுகெலும்பு: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
சோழன் எக்ஸ்பிரஸ் ரெயிலுக்கு கூடுதல் நிறுத்தம்
சேலம்: பராமரிப்பு பணி காரணமாக 3 ரெயில்கள் ரத்து
டி20 உலக கோப்பைக்கான தென் ஆப்பிரிக்க அணியில் மாற்றம்
பிக்பாஷ் லீக் தொடரில் இருந்து பாபர் அசாம் விலகல்
2026 டி20 உலகக்கோப்பை தொடர் குறித்து ரோகித் சர்மா நெகிழ்ச்சி பேட்டி
முதல் டி20 போட்டி: வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு அதிர்ச்சி அளித்த ஆப்கானிஸ்தான்
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: முதல் சுற்றில் மெத்வதேவ் வெற்றி
