ஏரியை ஆக்கிரமித்துள்ள அஇஅதிமுக பிரமுகர்கள்: நடவடிக்கை எடுக்குமாறு அரசுக்கு ஜி.ரா. கடிதம்
பதிவு செய்த நாள் : 28, ஜனவரி 2016 (14:56 IST)
மாற்றம் செய்த நாள் :28, ஜனவரி 2016 (15:40 IST)
ஏரியை ஆக்கிரமித்துள்ள அஇஅதிமுக பிரமுகர்கள்: நடவடிக்கை எடுக்குமாறு அரசுக்கு ஜி.ரா. கடிதம்
காஞ்சிபுரம் மாவட்டம் - மூவரசம்பட்டு கிராமம், சர்வே எண் - 44ல், 40 ஏக்கர் பரப்பளவு கொண்ட ஏரியை ஆக்கிரமித்துள்ள அஇஅதிமுக கட்சி பிரமுகர்கள் - பல்லாவரம் நகராட்சி பொதுநிதியிலிருந்து தனியார் கல்குவாரிக்கு சாலை அமைத்ததுடன், கட்சி அலுவலகமாக மாற்றி பிளாட் போட்டு விற்பனை செய்யும் முயற்சி நடக்கிறது. உடனே தலையிட்டு ஆக்கிரமிப்பை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலச் செயலாளர் ஜி. ராமகிருஷ்ணன், இன்று (28.1.2016) தமிழக அரசுக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.
மேலும், கண்டபடி மூவரசம்பட்டு கிராமத்தில் உள்ள மூவரசம்பட்டு ஏரியினை ஆளும் அஇஅதிமுக கட்சியினர் ஆக்கிரமித்து அலுவலகம் கட்டியுள்ளதையும், ஆளும் கட்சி பிரமுகர் ஒருவர் நடத்தும் கல்குவாரிக்கு சாலை வசதி செய்து தர ஏரியின் குறுக்கே அரசின் செலவில் ஏரியின் ஊடாக சாலை அமைத்துள்ளதையும் 27.1.2016 அன்று தினமலர் நாளிதழ், சென்னை பக்கத்தில் ஒரு செய்தி வெளியிட்டுள்ளது.
மேற்கண்ட சாலையை கால்நடைத்துறை அமைச்சர் டி.கே.எம். சின்னையா அவர்கள் திறந்து வைத்துள்ளார். இவையனைத்தும் சட்டத்திற்கு புறம்பானதும், பொது இடத்தை தனியாருக்கு தாரை வார்ப்பதும், பொதுநிதியை தனியார் வசதிக்கு பயனபடுத்துவதும் ஆகும். தொடர்ச்சியாக ஏரியை பிளாட் போட்டு விற்கும் முயற்சியிலும் சிலர் இறங்கியிருப்பதாக சொல்லப்படுகிறது.
சமீபத்தில் பெய்த கன மழையும் அதனால் ஏற்பட்ட வெள்ள சேதங்களும், கட்டமைப்பு சேதங்களையும், பொருட்சேதங்களையும், உயிரிழப்புகளையும் மனதில் நீங்கா பயத்தையும் மக்கள் மத்தியில் ஏற்படுத்தியுள்ளது.
இதையொட்டி ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட வேண்டுமென்ற கோரிக்கையை அனைத்துப் பகுதியினரும் முன்வைத்துள்ளனர். இதை சாக்காக்கி பல இடங்களில் ஏழை மக்களின் குடிசைகள் அகற்றப்பட்டுக் கொண்டிருக்கின்றன.
இந்நிலையில் ஏரிக்குள் ஆளுங்கட்சி பிரமுகர்கள் கட்சி அலுவலகம் அமைப்பதும், பொது பணத்தை தனியார் குவாரிக்கு சாலை அமைக்க செலவிடுவதும், அமைச்சரே திறந்து வைப்பதும் அதையொட்டி ஏரியை பிளாட் போட்டு விற்க சிலர் முயற்சிப்பதும் மிகவும் கண்டனத்திற்குரிய நடவடிக்கைகள்.
தங்கள் மேலான உடனடி தலையீட்டின் மூலம் ஏரிக்குள் அமைக்கப்பட்டுள்ள ஆளும் கட்சி அலுவலகத்தை உடனே அப்புறப்படுத்த வேண்டுமென்றும், ஏரிக்குள் சாலை அமைத்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றும், சாலைக்கு செலவிடப்பட்ட தொகையை சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடமிருந்து வசூலிக்க வேண்டுமென்றும், அதற்கு அனுமதியளித்த அதிகாரிகள் மீது சட்டப்படியான நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றும் கேட்டுக் கொள்கிறோம். இவ்வாறு கூறியுள்ளார்.




பூமியை நெருங்கும் வியாழன் கோள்..! வெறும் கண்களால் பார்க்கலாம்
சுவிட்சர்லாந்து: புத்தாண்டு கொண்டாட்டத்தில் வெடிவிபத்து - பலி எண்ணிக்கை 47ஆக உயர்வு
பாகிஸ்தானுடன் ரூ.6,196 கோடி மதிப்பிலான ஆயுத ஒப்பந்தத்திற்கு அமெரிக்கா ஒப்புதல்
சுற்றுலாவாசியின் தவறால்... சீனாவில் 1,500 ஆண்டுகள் பழமையான கோவிலில் தீ; வைரலான வீடியோ
ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
காஷ்மீரில் கடும் பனிப்பொழிவு.. 50 விமானங்கள் ரத்து
திருப்பதியில் ஒருநாள் உண்டியல் காணிக்கை ரூ.3 கோடியே 69 லட்சம்
டெல்லி குடியரசு தினவிழாவில் கம்பீரமாக அணிவகுத்து சென்ற தமிழ்நாட்டு அலங்கார ஊர்தி
டெல்லி கடமை பாதையில் தேசியக்கொடி ஏற்றினார் ஜனாதிபதி திரவுபதி முர்மு
போர் வீரர்கள் நினைவிடத்தில் பிரதமர் மோடி மரியாதை
டி20 உலக கோப்பைக்கான தென் ஆப்பிரிக்க அணியில் மாற்றம்
பிக்பாஷ் லீக் தொடரில் இருந்து பாபர் அசாம் விலகல்
2026 டி20 உலகக்கோப்பை தொடர் குறித்து ரோகித் சர்மா நெகிழ்ச்சி பேட்டி
முதல் டி20 போட்டி: வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு அதிர்ச்சி அளித்த ஆப்கானிஸ்தான்
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: முதல் சுற்றில் மெத்வதேவ் வெற்றி
