இலங்கை செல்கிறார் சுஷ்மா - மீனவர் பிரச்னை குறித்து பேச்சு
வரும் 5-ம் தேதி இலங்கை செல்லும் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் இரு நாட்டு மீனவர்கள் பிரச்னை குறித்து பேச்சுவார்த்தை நடத்த உள்ளார்.
இலங்கை தலைநகர் கொழும்பில் இந்தியா - இலங்கை கூட்டு ஆணையக் கூட்டம் வரும் 5 ம் தேதி நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் பங்கேற்றுகும், அமைச்சர் சுஷ்மா சுவராஜ் இந்தியா, இலங்கை மீனவர் பிரச்னைக்கு தீர்வு காண்பது குறித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார். இருநாட்டு மீனவர்கள் பரஸ்பரம் மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டு வருவது குறித்தும், எல்லை தாண்டும் மீனவர்கள் மீதான நடவடிக்கைகள் குறித்தும் இரு தரப்பினரும் விவாதிக்க உள்ளதாக கூறப்படுகிறது.
கொழும்பு பயணத்தின் போது, இலங்கை அதிபர் மைத்திரிபாலா சிறிசேனா, பிரதமர் ரணில் விக்கிரமசிங்கே, வெளியுறவுத் துறை அமைச்சர் மங்கள சமரவீரா, எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் ஆகியோரை சுஷ்மா ஸ்வராஜ் சந்தித்துப் பேச உள்ளார்.
பிப்ரவரி 6ம் தேதி யாழ்ப்பாணம் செல்லும் சுஷ்மா ஸ்வராஜ், அங்கு இந்தியாவின் நிதி உதவியில் கட்டப்பட்ட துரையப்பா விளையாட்டரங்கையும் திறந்து வைக்க உள்ளார்.




பூமியை நெருங்கும் வியாழன் கோள்..! வெறும் கண்களால் பார்க்கலாம்
சுவிட்சர்லாந்து: புத்தாண்டு கொண்டாட்டத்தில் வெடிவிபத்து - பலி எண்ணிக்கை 47ஆக உயர்வு
பாகிஸ்தானுடன் ரூ.6,196 கோடி மதிப்பிலான ஆயுத ஒப்பந்தத்திற்கு அமெரிக்கா ஒப்புதல்
சுற்றுலாவாசியின் தவறால்... சீனாவில் 1,500 ஆண்டுகள் பழமையான கோவிலில் தீ; வைரலான வீடியோ
ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்க திமுக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை - அன்புமணி குற்றச்சாட்டு
ஜல்லிக்கட்டில் வீரர்கள் உயிரிழந்தால் ரூ.10 லட்சம் நிவாரணம்: எடப்பாடி பழனிசாமி உறுதி
பெண்கள்தான் சமூகத்தின் முதுகெலும்பு: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
சோழன் எக்ஸ்பிரஸ் ரெயிலுக்கு கூடுதல் நிறுத்தம்
சேலம்: பராமரிப்பு பணி காரணமாக 3 ரெயில்கள் ரத்து
டி20 உலக கோப்பைக்கான தென் ஆப்பிரிக்க அணியில் மாற்றம்
பிக்பாஷ் லீக் தொடரில் இருந்து பாபர் அசாம் விலகல்
2026 டி20 உலகக்கோப்பை தொடர் குறித்து ரோகித் சர்மா நெகிழ்ச்சி பேட்டி
முதல் டி20 போட்டி: வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு அதிர்ச்சி அளித்த ஆப்கானிஸ்தான்
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: முதல் சுற்றில் மெத்வதேவ் வெற்றி
