1ம் வகுப்பு மாணவனை கல்லால் அடித்துக் கொன்ற 6ம் வகுப்பு மாணவன்: திருப்பூரில் அதிர்ச்சி சம்பவம்

நக்கீரன்  நக்கீரன்

பதிவு செய்த நாள் : 28, ஜனவரி 2016 (9:9 IST)

மாற்றம் செய்த நாள் :28, ஜனவரி 2016 (9:10 IST)

1ம் வகுப்பு மாணவனை கல்லால் அடித்துக் கொன்ற 6ம் வகுப்பு மாணவன்: திருப்பூரில் அதிர்ச்சி சம்பவம்

திருப்பூர் அருகே தனியார் பள்ளி ஒன்றில் 1ம் வகுப்பு மாணவனை 6ம் வகுப்பு மாணவன் கல்லால் அடித்துக் கொன்ற சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

பாரப்பாளையம் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் வகுப்பு தொடங்கும் முன்பு ஒன்றாம் வகுப்பு மாணவனை தனியாக அழைத்துச் சென்ற 6ம் வகுப்பு மாணவன், கல்லால் தாக்கியுள்ளான். இதனை கவனித்த சக மாணவர்கள், ஆசிரியர்களிடம் இதனை தெரிவித்துள்ளனர். இதையடுத்து கழிவறைக்குள் சென்று பார்த்த ஆசிரியர்கள் தலையில் ரத்த காயத்துடன் மயங்கி கிடந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்தனர். 

உடனடியாக மாணவனை மருத்துவமணைக்கு கொண்டு சென்றனர். மாணவனை பரிசோதித்த மருத்துவர்கள், மாணவன் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். 

இதனையடுத்து போலீசார் மாணவனின் உடலை பிரேத பரிசோதனைக்காக கொண்டு சென்றனர். 6ம் வகுப்பு மாணவனை போலீசார் கைது செய்து அழைத்துச் சென்றனர். அவனை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறார் சீர்திருத்தப்பள்ளில் அடைக்க நடவடிக்கை எடுத்து வருகின்றனர். 

மூலக்கதை