மத்திய அரசு சார்பில் எந்த அமைப்பும் இல்லாததே மாணவிகளின் உயிர் பலிக்கு காரணம்!
இந்தியாவில், யோகா மற்றும் இயற்கை மருத்துவம் தொடர்பான படிப்புகள் தொடங்கப்பட்டு 25 ஆண்டுகள் கடந்து விட்ட நிலையில், அதனை கண்காணிக்க மத்திய அரசு சார்பில் எந்த ஒரு அமைப்பும் இல்லாததே, 3 மாணவிகளின் உயிர் பலிக்கு காரணம் என கல்வியாளர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.
விழுப்புரம் மாவட்டம் கள்ளக்குறிச்சி அருகே செயல்பட்டு வந்த எஸ்.வி.எஸ். கல்லூரியைப் போன்று, யோகா மற்றும் இயற்கை மருத்துவம் தொடர்பான படிப்புகளை நடத்தும் கல்லூரிகள், நாடு முழுவதும் புற்றீசல்கள் போல் பெருகி வருவதாக கல்வியாளர்கள் தெரிவிக்கின்றனர்.
ஆனால், இதுபோன்ற கல்லூரிகளில் அடிப்படை வசதிகள் இருக்கிறதா? இங்கு பணியாற்றும் பேராசிரியர்கள் உரிய கல்வித் தகுதி பெற்றவர்களா? என்பது உள்ளிட்ட பல்வேறு விஷயங்களை கண்காணிக்க மத்திய, மாநில அரசுகள் சார்பில் எந்த ஒரு அமைப்பும் இல்லாததே பல்வேறு தவறுகள் நடைபெறுவதற்கு காரணமாக அமைந்து விடுகிறது என்ற கருத்தும் முன்வைக்கப்படுகிறது.
இதுஒருபுறம் என்றால், யோகா மற்றும் இயற்கை மருத்துவ கல்வியை வழங்கும் கல்லூரிகளை வரையறை செய்யும் நோக்கத்துடன் மத்திய அரசு சார்பில் நியமிக்கப்பட்ட குழுவினர், ஆயுஷ் அமைச்சகத்திடம் கடந்தாண்டு செப்டம்பரில் விரிவான அறிக்கையை சமர்ப்பித்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது. அதில், யோகா மற்றும் இயற்கை மருத்துவம் தொடர்பான இளங்கலை பட்டப்படிப்பை பயிற்றுவிக்கும் கல்லூரிகளை கண்காணிக்க தனி அமைப்பு ஒன்றை உருவாக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்ட போதிலும், அந்தக் கோரிக்கையை மத்திய அரசு இதுவரை ஏற்கவில்லை என்று கூறப்படுகிறது.
எனவே, இயற்கை மருத்துவம் மற்றும் யோகா கல்வியை பயிற்றுவிக்கும் கல்லூரிகளை நெறிப்படுத்தவும், இந்த துறையில் உள்ள போலி கல்வி நிறுவனங்களை ஒழிக்கவும் மத்திய, மாநில அரசுகள் உடனடி நடவடிக்கை எடுத்தால் மட்டுமே, மாணவர்களின் எதிர்காலத்தை உறுதிப்படுத்த முடியும் என கல்வியாளர்கள் வலியுறுத்துகின்றனர்.




பூமியை நெருங்கும் வியாழன் கோள்..! வெறும் கண்களால் பார்க்கலாம்
சுவிட்சர்லாந்து: புத்தாண்டு கொண்டாட்டத்தில் வெடிவிபத்து - பலி எண்ணிக்கை 47ஆக உயர்வு
பாகிஸ்தானுடன் ரூ.6,196 கோடி மதிப்பிலான ஆயுத ஒப்பந்தத்திற்கு அமெரிக்கா ஒப்புதல்
சுற்றுலாவாசியின் தவறால்... சீனாவில் 1,500 ஆண்டுகள் பழமையான கோவிலில் தீ; வைரலான வீடியோ
ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்க திமுக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை - அன்புமணி குற்றச்சாட்டு
ஜல்லிக்கட்டில் வீரர்கள் உயிரிழந்தால் ரூ.10 லட்சம் நிவாரணம்: எடப்பாடி பழனிசாமி உறுதி
பெண்கள்தான் சமூகத்தின் முதுகெலும்பு: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
சோழன் எக்ஸ்பிரஸ் ரெயிலுக்கு கூடுதல் நிறுத்தம்
சேலம்: பராமரிப்பு பணி காரணமாக 3 ரெயில்கள் ரத்து
டி20 உலக கோப்பைக்கான தென் ஆப்பிரிக்க அணியில் மாற்றம்
பிக்பாஷ் லீக் தொடரில் இருந்து பாபர் அசாம் விலகல்
2026 டி20 உலகக்கோப்பை தொடர் குறித்து ரோகித் சர்மா நெகிழ்ச்சி பேட்டி
முதல் டி20 போட்டி: வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு அதிர்ச்சி அளித்த ஆப்கானிஸ்தான்
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: முதல் சுற்றில் மெத்வதேவ் வெற்றி
