பெட்ரோல் மற்றும் டீசல் மீதான கலால் வரியை உயர்த்தியது மத்திய அரசு
பெட்ரோல் மற்றும் டீசல் மீதான கலால் வரியை மத்திய அரசு உயர்த்தியுள்ளது.
கச்சா எண்ணையின் விலை பீப்பாய் 30 டாலருக்கும் கீழாக சரிந்துள்ள நிலையில், எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல், டீசல் விலையை குறைத்தன. அதற்கு முன்பாக, பெட்ரோல் மற்றும் டீசல் மீதான கலால் வரியை மத்திய அரசு உயர்த்தியது.
ஒரு லிட்டர் பெட்ரோல் மீது 75 பைசா மற்றும், ஒரு லிட்டர் டீசல் மீது 2 ரூபாய் வரி உயர்த்தப்பட்டுள்ளது. இதன் மூலம் அரசுக்கு 3 ஆயிரத்து 700 கோடி ரூபாய் கூடுதல் வருவாய் கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பெட்ரோல் மற்றும் டீசல் மீதான கலால் வரியை இம்மாதம் 3ம் தேதி உயர்த்திய மத்திய அரசு, இரண்டு வாரங்களுக்குள்ளாக மீண்டும் உயர்த்தியிருக்கிறது. கடந்த 3 மாதங்களில் 4 முறை கலால் வரியை மத்திய அரசு உயர்த்தியிருக்கிறது.
இதன் மூலம், அரசுக்கு 13 ஆயிரத்து 700 கோடி ரூபாய் கூடுதல் வருவாய் கிடைக்கும் என கணக்கிடப்பட்டுள்ளது.




பூமியை நெருங்கும் வியாழன் கோள்..! வெறும் கண்களால் பார்க்கலாம்
சுவிட்சர்லாந்து: புத்தாண்டு கொண்டாட்டத்தில் வெடிவிபத்து - பலி எண்ணிக்கை 47ஆக உயர்வு
பாகிஸ்தானுடன் ரூ.6,196 கோடி மதிப்பிலான ஆயுத ஒப்பந்தத்திற்கு அமெரிக்கா ஒப்புதல்
சுற்றுலாவாசியின் தவறால்... சீனாவில் 1,500 ஆண்டுகள் பழமையான கோவிலில் தீ; வைரலான வீடியோ
ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
காஷ்மீரில் கடும் பனிப்பொழிவு.. 50 விமானங்கள் ரத்து
திருப்பதியில் ஒருநாள் உண்டியல் காணிக்கை ரூ.3 கோடியே 69 லட்சம்
டெல்லி குடியரசு தினவிழாவில் கம்பீரமாக அணிவகுத்து சென்ற தமிழ்நாட்டு அலங்கார ஊர்தி
டெல்லி கடமை பாதையில் தேசியக்கொடி ஏற்றினார் ஜனாதிபதி திரவுபதி முர்மு
போர் வீரர்கள் நினைவிடத்தில் பிரதமர் மோடி மரியாதை
பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்க திமுக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை - அன்புமணி குற்றச்சாட்டு
ஜல்லிக்கட்டில் வீரர்கள் உயிரிழந்தால் ரூ.10 லட்சம் நிவாரணம்: எடப்பாடி பழனிசாமி உறுதி
பெண்கள்தான் சமூகத்தின் முதுகெலும்பு: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
சோழன் எக்ஸ்பிரஸ் ரெயிலுக்கு கூடுதல் நிறுத்தம்
சேலம்: பராமரிப்பு பணி காரணமாக 3 ரெயில்கள் ரத்து
