புதுக்கோட்டை: கடலுக்கு மீன் பிடிக்க சென்று மாயமான மீனவர்கள் மீட்பு
புதுக்கோட்டை, வங்கக்கடலில் நிலைகொண்டுள்ள காற்றழுத்த தாழ்வுப்பகுதி காரணமாக கடலில் வழக்கத்தை விட அதிக வேகத்தில் காற்று வீசும் என்றும், மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் எனவும் வானிலை ஆய்வு மையம் அறிவித்து இருந்தது. இதற்கிடையே, வானிலை ஆய்வு மையத்தின் அறிவுறுத்தலை மீறி புதுக்கோட்டை மாவட்டம் மணமேல்குடி பகுதியைச் சேர்ந்த 4 மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க சென்றனர். ஆனால் வெகு நேரமாகியும் அவர்கள் கரை திரும்பவில்லை. இதையடுத்து அவர்களின் உறவினர்கள் கொடுத்த தகவலின் பேரின் கடலோர பாதுகாப்புக் குழுமத்தினர் கடலில் தேடுதல் வேட்டை நடத்தினர். இந்த நிலையில், பலத்த காற்று காரணமாக படகு கவிழ்ந்ததில் 4 மீனவர்களும் கடலில் தத்தளித்துக்கொண்டு இருந்தனர். 16 கடல் மைல் தொலைவில் தத்தளித்துக் கொண்டிருந்த மூர்த்தி, மணிகண்டன், விநாயகம் மற்றும் மணி ஆகிய 4 மீனவர்களையும் கடலோர பாதுகாப்புக் குழுமத்தினர் தற்போது பத்திரமாக மீட்டுள்ளனர்.




பூமியை நெருங்கும் வியாழன் கோள்..! வெறும் கண்களால் பார்க்கலாம்
சுவிட்சர்லாந்து: புத்தாண்டு கொண்டாட்டத்தில் வெடிவிபத்து - பலி எண்ணிக்கை 47ஆக உயர்வு
பாகிஸ்தானுடன் ரூ.6,196 கோடி மதிப்பிலான ஆயுத ஒப்பந்தத்திற்கு அமெரிக்கா ஒப்புதல்
சுற்றுலாவாசியின் தவறால்... சீனாவில் 1,500 ஆண்டுகள் பழமையான கோவிலில் தீ; வைரலான வீடியோ
ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
விண்ணில் புறப்பட தயாரான பி.எஸ்.எல்.வி. ராக்கெட்: கவுண்ட்டவுன் தொடங்கியது
திருப்பதி: பாதாம் பாலில் மயக்க மருந்தை கலந்து கொடுத்து மூதாட்டியிடம் செயின் பறிப்பு
வெளியுறவு மந்திரி ஜெய்சங்கர் பிறந்தநாள்: பிரதமர் மோடி வாழ்த்து
பொதுச் செயலாளர் பதவி: எடப்பாடி பழனிசாமிக்கு எதிரான மனு மீது இன்று விசாரணை
காங். மூத்த தலைவர் சோனியா காந்தி மருத்துவமனையில் அனுமதி
நியூசிலாந்துக்கு எதிரான ஒரு நாள் தொடர்: ரிஷப் பண்ட் விலகல்
ஒருநாள் கிரிக்கெட் போட்டி: இந்தியா-நியூசிலாந்து அணிகள் இன்று மோதல்
ஆஷஸ் கடைசி டெஸ்ட்: இங்கிலாந்தை வீழ்த்தி ஆஸ்திரேலியா அபார வெற்றி
ஆஷஸ் கடைசி டெஸ்ட்: ஆஸ்திரேலிய அணிக்கு 160 ரன்கள் வெற்றி இலக்கு
நியூசிலாந்துக்கு எதிரான ஒரு நாள் கிரிக்கெட்: இந்திய அணி இன்று அறிவிப்பு
