குடியரசு தின விழாவில் பங்கேற்க நீலகிரி பெண்ணுக்கு ஜனாதிபதி அழைப்பு
சென்னை,நாடு முழுவதும் 77-வது குடியரசு தினம் வருகிற 26-ந்தேதி கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. டெல்லியில் நடைபெறும் நிகழ்ச்சியில் ஜனாதிபதி திரவுபதி முர்மு பங்கேற்று தேசியக்கொடி ஏற்றி மரியாதை செலுத்துவார். இதில் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் தலைவர்கள் பங்கேற்பார்கள். இதையொட்டி தற்போதே, டெல்லியில் நடைபெறும் குடியரசு தினவிழாவில் கலந்து கொள்வதற்காக நாடு முழுவதும் தலைவர்கள், பல்வேறு துறைகளின் சாதனையாளர்கள் உள்ளிட்டோருக்கு அழைப்பு விடுக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் நீலகிரி மாவட்டம் கூடலூர் நகராட்சிக்கு உட்பட்ட நந்தட்டி அருகே மில்லிகுன்னு கிராமத்தை சேர்ந்த ராஜேந்திரன் மனைவி இந்திராணிக்கு நேற்று ஜனாதிபதி திரவுபதி முர்முவிடம் இருந்து கடிதம் ஒன்று வந்தது. இந்த கடிதத்தை கொடுக்க கூடலூர் உட்கோட்ட தபால் நிலைய ஆய்வாளர் ராமஜெயனேலு தலைமையில் அலுவலர்கள், தபால்காரர் ஆகியோர் இந்திராணி வீட்டுக்கு நேரில் சென்றனர். ஆனால் வீட்டில் இந்திராணி இல்லை. தொடர்ந்து விசாரித்த போது அதேபகுதியில் உள்ள தேயிலை தோட்டத்தில் இந்திராணி தேயிலை பறிக்கும் பணியில் ஈடுபட்டு கொண்டிருப்பது தெரியவந்தது. அங்கு சென்று ஜனாதிபதி அனுப்பிய கடிதத்தை இந்திராணியிடம் வழங்கினர். இதையடுத்து கடிதத்தை பிரித்து படித்து பார்த்தபோது, அதில் டெல்லியில் நடைபெறும் 77-வது குடியரசு தின விழாவில் பங்கேற்க வரும்படி குறிப்பிடப்பட்டிருந்தது. இதைக்கேட்ட இந்திராணி, குடியரசு தின விழாவில் பங்கேற்க தனக்கு ஜனாதிபதியிடம் இருந்து அழைப்பு வந்ததை எண்ணி பூரிப்படைந்தார். அவருக்கு தேயிலை தோட்ட தொழிலாளர்கள் மற்றும் பல்வேறு தரப்பினர் பாராட்டு தெரிவித்தனர்.




பூமியை நெருங்கும் வியாழன் கோள்..! வெறும் கண்களால் பார்க்கலாம்
சுவிட்சர்லாந்து: புத்தாண்டு கொண்டாட்டத்தில் வெடிவிபத்து - பலி எண்ணிக்கை 47ஆக உயர்வு
பாகிஸ்தானுடன் ரூ.6,196 கோடி மதிப்பிலான ஆயுத ஒப்பந்தத்திற்கு அமெரிக்கா ஒப்புதல்
சுற்றுலாவாசியின் தவறால்... சீனாவில் 1,500 ஆண்டுகள் பழமையான கோவிலில் தீ; வைரலான வீடியோ
ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
சத்தீஷ்காரில் மேலும் 29 நக்சலைட்டுகள் சரண்
கூடலூரில் வீடு புகுந்து மூதாட்டியிடம் நகை பறிப்பு
பெங்களூரு: மெட்ரோ பணியின்போது திடீரென கவிழ்ந்த ராட்சத கிரேன்
கிணற்றில் தவறி விழுந்த குட்டி யானையை போராடி மீட்ட வனத்துறையினர்
தேசிய இளையோர் திருவிழா நிறைவு நாள் நிகழ்ச்சி: தமிழக மாணவியுடன் உரையாடிய பிரதமர் மோடி
நியூசிலாந்துக்கு எதிரான டி20 தொடரில் இருந்து இந்திய முன்னணி வீரர் விலகல்
இளையோர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி இன்று தொடக்கம்
நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரில் இருந்து வாஷிங்டன் சுந்தர் விலகல்.!
டி20 உலகக்கோப்பை: வங்காளதேசம் மோதும் ஆட்டத்தை நடத்த தயார் - பாகிஸ்தான் அறிவிப்பு
வங்காளதேச அணி விளையாடும் போட்டிகளை வேறு இடங்களுக்கு மாற்ற திட்டம்
