’ஆரம்பத்தில் அவருடன் நடிக்க பதட்டப்பட்டேன்’- ஷ்ரத்தா கபூர்
மும்பை,பாலிவுட்டில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் ஷ்ரத்தா கபூர். இவர் கடைசியாக ஸ்ட்ரீ 2 படத்தில் நடித்திருந்தார். புகழ்பெற்ற தமாஷா கலைஞர் விதாபாய் பாவ் மங் நாராயண்கோன்கரின் வாழ்க்கையை மையமாக கொண்டு எடுக்கப்பட்டு வரும் படம் ‘ஈதா’. இப்படத்தில் விதாபாய் கதாபாத்திரத்தில் பாலிவுட் நடிகை ஸ்ரத்தா கபூர் நடித்துவருகிறார். ரந்தீப் ஹுடா கதாநாயகனாக நடிக்கிறார். லக்சுமன் உடேகர் இப்படத்தை இயக்குகிறார். இந்நிலையில், ஒரு நேர்காண்லில் கலந்துகொண்ட ஷ்ரத்தா கபூர், பிரபாஸுடன் பணிபுரிந்தது பற்றி பகிர்ந்துகொண்டார். அவர் பேசுகையில், "பாகுபலிக்குப் பிறகு பிரபாஸின் உடனடி படம் என்பதால், சாஹோவில் அவருடன் பணிபுரிவது குறித்து நான் ஆரம்பத்தில் பதட்டப்பட்டேன். அவர் என் பதட்டத்தைப் புரிந்துகொண்டார், என்னிடம் பேசினார், என்னை சவுகரியமாக உணர வைத்தார்" என்றார். பாகுபலி படங்களுக்கு பிறகு பிரபாஸ் நடித்த படம் சாஹோ. சுஜீத் இயக்கிய இப்படத்தில் ஷ்ரத்தா கபூர், அருண் விஜய், ஜாக்கி ஷெராப் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்தனர். இப்படம் நல்ல வரவேற்பை பெற்றது.A post shared by Prabhas (@actorprabhas)




சுவிட்சர்லாந்து: புத்தாண்டு கொண்டாட்டத்தில் வெடிவிபத்து - பலி எண்ணிக்கை 47ஆக உயர்வு
பாகிஸ்தானுடன் ரூ.6,196 கோடி மதிப்பிலான ஆயுத ஒப்பந்தத்திற்கு அமெரிக்கா ஒப்புதல்
சுற்றுலாவாசியின் தவறால்... சீனாவில் 1,500 ஆண்டுகள் பழமையான கோவிலில் தீ; வைரலான வீடியோ
ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
காதல் திருமண விவகாரம்; நெல்லை பத்திரப்பதிவு அலுவலகத்தில் இரு தரப்பினர் மோதல்
காங். மூத்த தலைவர் சோனியா காந்தி மருத்துவமனையில் அனுமதி
நள்ளிரவில் வீட்டுக்குள் புகுந்து 3 பேரை மிதித்து கொன்ற காட்டு யானை.!
மகாமேளா தொடங்கியது... பிரயாக்ராஜில் கடும் குளிரிலும் லட்சக்கணக்கானோர் புனித நீராடல்
‘இன்றைய இந்தியா தனது கடந்த காலத்தைப் பற்றி பெருமை கொள்கிறது' - ராஜ்நாத் சிங்
ஆஸ்திரேலியாவில் பயங்கரவாத தாக்குதல்: பிரதமர் மோடி கடும் கண்டனம்
சென்னை புத்தகக் காட்சிக்கு வரும் வாசகர்களுக்கு அனுமதி இலவசம்
நாகப்ப படையாட்சியாரின் அடையாளத்தை அழிக்க திமுக அரசு முயற்சி - அன்புமணி கண்டனம்
பராமரிப்பு பணி: ஈரோடு -செங்கோட்டை ரெயில் பகுதியாக ரத்து
தஞ்சை மாவட்டத்துக்கு நாளை உள்ளூர் விடுமுறை
மழை இல்லாததால் வைகை அணை நீர்மட்டம் 48 அடியாக சரிவு
