அமெரிக்கா: ஜே.டி. வான்ஸ் வீடு மீது தாக்குதல் நடத்திய நபர் கைது
நியூயார்க், அமெரிக்காவின் ஒஹியோ மாகாணத்தில் சின்சின்னாட்டி நகரில் துணை ஜனாதிபதி ஜே.டி. வான்ஸ் வீடு அமைந்துள்ளது. இந்நிலையில் இந்த வீடு மீது மர்ம நபர் ஒருவர் இன்று தாக்குதல் நடத்தி உள்ளார். அவர் சுத்தியலை கொண்டு தாக்கியதில் ஜன்னல் கண்ணாடிகள் உடைந்து விழுந்துள்ளன. எனினும், இந்த சம்பவத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. சம்பவத்தின்போது, வான்ஸ் மற்றும் அவருடைய குடும்பத்தினர் யாரும் வீட்டில் இல்லை என கூறப்படுகிறது. இந்த சம்பவத்தில் அந்த நபரை போலீசார் தீவிர தேடுதலுக்கு பின்னர் கைது செய்துள்ளனர். இந்த தாக்குதலுக்கான காரணம் என்னவென தெரிய வரவில்லை. அதுபற்றி விசாரிக்கப்பட்டு வருகிறது. அவர் மனநலம் பாதிக்கப்பட்டவர் என கூறப்படுகிறது. எனினும், அதுபற்றியும் விசாரிக்கப்பட்டு வருகிறது. வான்சின் மீது தாக்குதல் நடத்தியதில் பாதிக்கப்பட்ட வீட்டின் ஜன்னலின் புகைப்படம் வலைதளத்தில் பகிரப்பட்டு உள்ளது. அவர் வான்சை இலக்காக கொண்டு தாக்குதல் நடத்தினாரா? அல்லது அவரது குடும்பத்தினரை தேடி வந்தாரா? என்பது விசாரணைக்கு பின்னரே தெரிய வரும். எனினும், அதுபற்றி அமெரிக்க உளவு துறை எந்த தகவலையும் அளிக்கவில்லை.




காங். மூத்த தலைவர் சோனியா காந்தி மருத்துவமனையில் அனுமதி
நள்ளிரவில் வீட்டுக்குள் புகுந்து 3 பேரை மிதித்து கொன்ற காட்டு யானை.!
மகாமேளா தொடங்கியது... பிரயாக்ராஜில் கடும் குளிரிலும் லட்சக்கணக்கானோர் புனித நீராடல்
‘இன்றைய இந்தியா தனது கடந்த காலத்தைப் பற்றி பெருமை கொள்கிறது' - ராஜ்நாத் சிங்
ஆஸ்திரேலியாவில் பயங்கரவாத தாக்குதல்: பிரதமர் மோடி கடும் கண்டனம்
சென்னை புத்தகக் காட்சிக்கு வரும் வாசகர்களுக்கு அனுமதி இலவசம்
நாகப்ப படையாட்சியாரின் அடையாளத்தை அழிக்க திமுக அரசு முயற்சி - அன்புமணி கண்டனம்
பராமரிப்பு பணி: ஈரோடு -செங்கோட்டை ரெயில் பகுதியாக ரத்து
தஞ்சை மாவட்டத்துக்கு நாளை உள்ளூர் விடுமுறை
மழை இல்லாததால் வைகை அணை நீர்மட்டம் 48 அடியாக சரிவு
நியூசிலாந்துக்கு எதிரான ஒரு நாள் கிரிக்கெட்: இந்திய அணி இன்று அறிவிப்பு
இந்திய அணி வீரர்கள் மீது அஸ்வின் அதிருப்தி
கிளட்ச் செஸ் போட்டி: சாம்பியன் பட்டம் வென்றார் கார்ல்சன்
ஆஷஸ் முதல் டெஸ்ட்: கம்மின்ஸ் விலகல்... ஆஸி. அணிக்கு புதிய கேப்டன் நியமனம்
ஐ.சி.சி. தரவரிசை: இந்திய வீராங்கனை தீப்தி ஷர்மா முன்னேற்றம்
