கேம்பியா: அகதிகளை ஏற்றி சென்ற படகு விபத்தில் சிக்கி 7 பேர் பலி; பலர் மாயம்
பஞ்சுல், மேற்கு ஆப்பிரிக்காவின் சில நாடுகள், கேம்பியா மற்றும் செனகல் உள்ளிட்ட நாடுகளை சேர்ந்த அகதிகள் ஒவ்வோர் ஆண்டும், வேலை தேடியும், சிறந்த வாழ்க்கைக்காகவும் ஐரோப்பிய ஒன்றியம் உள்ளிட்ட பகுதிகளுக்கு, கடல் வழியே சட்டவிரோத வகையில் படகுகளில் புலம்பெயர்ந்து செல்வது வழக்கம். அப்போது, இயற்கை பேரிடர்கள், பலத்த காற்று மற்றும் கடல் அலைகளால் சிக்கி பலர் உயிரிழக்கும் சம்பவங்கள் ஏற்படுகின்றன. இந்த நிலையில், 200-க்கும் மேற்பட்ட அகதிகளை ஏற்றி கொண்டு படகு ஒன்று கடலில் சென்றுள்ளது. அப்போது அது திடீரென விபத்தில் சிக்கியது. இதில், 7 பேர் உயிரிழந்தனர். அவர்களின் உடல்கள் மீட்கப்பட்டன. 10 பேரின் நிலைமை கவலைக்குரிய வகையில் உள்ளது. 96 பேர் மீட்கப்பட்டு சிகிச்சைக்கு கொண்டு செல்லப்பட்டனர். பலரை காணவில்லை. அவர்களை தேடும் பணி தொடர்ந்து நடந்து வருகிறது. இதில் மணல்திட்டு ஒன்றின் அருகே, விபத்தில் சிக்கி கவிழ்ந்த படகு கண்டறியப்பட்டது. படகில் சென்றவர்கள் ஆப்பிரிக்காவின் பல்வேறு நாடுகளை சேர்ந்தவர்களாக இருக்க கூடும் என நம்பப்படுகிறது.




காங். மூத்த தலைவர் சோனியா காந்தி மருத்துவமனையில் அனுமதி
நள்ளிரவில் வீட்டுக்குள் புகுந்து 3 பேரை மிதித்து கொன்ற காட்டு யானை.!
மகாமேளா தொடங்கியது... பிரயாக்ராஜில் கடும் குளிரிலும் லட்சக்கணக்கானோர் புனித நீராடல்
‘இன்றைய இந்தியா தனது கடந்த காலத்தைப் பற்றி பெருமை கொள்கிறது' - ராஜ்நாத் சிங்
ஆஸ்திரேலியாவில் பயங்கரவாத தாக்குதல்: பிரதமர் மோடி கடும் கண்டனம்
சென்னை புத்தகக் காட்சிக்கு வரும் வாசகர்களுக்கு அனுமதி இலவசம்
நாகப்ப படையாட்சியாரின் அடையாளத்தை அழிக்க திமுக அரசு முயற்சி - அன்புமணி கண்டனம்
பராமரிப்பு பணி: ஈரோடு -செங்கோட்டை ரெயில் பகுதியாக ரத்து
தஞ்சை மாவட்டத்துக்கு நாளை உள்ளூர் விடுமுறை
மழை இல்லாததால் வைகை அணை நீர்மட்டம் 48 அடியாக சரிவு
நியூசிலாந்துக்கு எதிரான ஒரு நாள் கிரிக்கெட்: இந்திய அணி இன்று அறிவிப்பு
இந்திய அணி வீரர்கள் மீது அஸ்வின் அதிருப்தி
கிளட்ச் செஸ் போட்டி: சாம்பியன் பட்டம் வென்றார் கார்ல்சன்
ஆஷஸ் முதல் டெஸ்ட்: கம்மின்ஸ் விலகல்... ஆஸி. அணிக்கு புதிய கேப்டன் நியமனம்
ஐ.சி.சி. தரவரிசை: இந்திய வீராங்கனை தீப்தி ஷர்மா முன்னேற்றம்
