வாடிக்கையாளர்களை கவர சீரியல் பல்பு.. டீக்கடையில் மின்சாரம் தாக்கி 2 பேர் பரிதாப பலி
மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகே டீக்கடை நடத்தி வருபவர் ரஞ்சித் (வயது 35). இவரது கடையில் டீ மாஸ்டராக வேலை பார்த்து வந்தவர் பாலகுரு (50). டீக்கடைக்கு வாடிக்கையாளர்களை கவர சீரியல் பல்பு தொங்கவிடப்பட்டிருந்தது. இன்று காலை சீரியல் பல்பு, கடையில் உள்ள இரும்பு கம்பியில் உரசிக் கொண்டிருந்தது.அப்போது, சீரியல் பல்பு தொங்கிக் கொண்டிருந்த மின் வயரில் இருந்து மின்கசிவு ஏற்பட்டு இரும்பு கம்பியில் மின்சாரம் பாய்ந்து கொண்டிருந்தது. இதை தற்செயலாக தொட்ட பாலகுரு மீது மின்சாரம் பாய்ந்தது. அவரை காப்பாற்ற முயன்ற கடை உரிமையாளர் ரஞ்சித் மீதும் மின்சாரம் தாக்கியது. இதில், தூக்கி வீசப்பட்ட இருவரும் சம்பவ இடத்திலேயே இறந்துபோயினர். இதுகுறித்து, வாடிப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். உயிரிழந்த 2 பேரின் உடல்களும் பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. மின்சாரம் தாக்கி 2 பேர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரிய சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.




பாகிஸ்தானுடன் ரூ.6,196 கோடி மதிப்பிலான ஆயுத ஒப்பந்தத்திற்கு அமெரிக்கா ஒப்புதல்
சுற்றுலாவாசியின் தவறால்... சீனாவில் 1,500 ஆண்டுகள் பழமையான கோவிலில் தீ; வைரலான வீடியோ
ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
காதல் திருமண விவகாரம்; நெல்லை பத்திரப்பதிவு அலுவலகத்தில் இரு தரப்பினர் மோதல்
அரபிக் கடலில் துறைமுகம் அமைக்க பாகிஸ்தான் திட்டம்
ஆஸ்திரேலியாவில் பயங்கரவாத தாக்குதல்: பிரதமர் மோடி கடும் கண்டனம்
கோவா தீ விபத்து சம்பவம்; விரிவான விசாரணை தேவை - ராகுல் காந்தி வலியுறுத்தல்
நடிகைக்கு ஆபாச படங்கள் அனுப்பி பாலியல் தொல்லை - தனியார் நிறுவன மேலாளர் கைது
விமானத்தின் அவசரகால கதவை திறக்க முயன்ற நபர்; பயணிகள் அதிர்ச்சி
யூடியூப்பில் விளம்பர இடையூறு இன்றி வீடியோ பார்க்க புதிய பிளான் அறிமுகம்
இந்திய அணி வீரர்கள் மீது அஸ்வின் அதிருப்தி
கிளட்ச் செஸ் போட்டி: சாம்பியன் பட்டம் வென்றார் கார்ல்சன்
ஆஷஸ் முதல் டெஸ்ட்: கம்மின்ஸ் விலகல்... ஆஸி. அணிக்கு புதிய கேப்டன் நியமனம்
ஐ.சி.சி. தரவரிசை: இந்திய வீராங்கனை தீப்தி ஷர்மா முன்னேற்றம்
அடுத்த அவதாரம்.. டிரோன் பைலட் உரிமம் பெற்ற தோனி
