கணிதமேதை சீனிவாச இராமானுசன் அவர்களுக்கு சென்னையில் அருங்காட்சியகம் நடத்தும் கணித ஆர்வலர்
33 ஆண்டுகள் மட்டுமே வாழ்ந்த கணிதமேதை இராமானுசன் அவர்களுக்கு இந்தியாவின் பெருமை மிகு அடையாளமாகத் திகழும் மேதைக்கு பெருமை சேர்க்கும் வகையில் சென்னையில் மிகப்பெரிய பொருட்செலவில் ஒரு தளத்தை ஒதுக்கி அருங்காட்சியகம் அமைத்துள்ளார் திரு.போஸ்
வண்ணாரப்பேட்டையில் வாகனம் நுழையமுடியாத இந்திய வணிகத்தில் முக்கிய இடமாக இருக்கும் அந்த நெருக்கடியான இடத்தில் ,மேற்கத்திய நாடுகளுக்கு இணையான தரத்தில் குளிரூட்டப்பட்ட அருமையான ஒரு அருங்காட்சியத்தை நேற்று சுற்றிக்காட்டி அவர் நேரில் விளக்கியபோது அதன்பின் உள்ள உழைப்பை , கணிதத்தின் மேல் அவருக்கு உள்ள ஈடுபாட்டை உணர்ந்தேன்.
இதைப் பார்க்க யார் வருகிறார்கள் என்றேன். இந்தியர்கள் அவ்வளவாக வருவதில்லை, வெளிநாட்டினர் பலர் வந்து செல்கிறார்கள் என்றார். கணித ஆர்வலர், ஆசிரியர் பி.கே. சீனுவாசன் என்பவர் இவருக்கு திரு.இராமானுசன் குறித்த பல அரிய தகவல்களை வழங்கி இங்கு தங்கியுள்ளார். இராமானுசன் குறித்த பல்வேறு விவரங்களை தொகுத்து வைத்துள்ள உங்களை தொடர் நேர்காணல் செய்து காணொளியாக ஆவணப்படுத்த வலைத்தமிழ் ஏற்பாடு செய்யும் என்று கூறினேன்.
இவர் பல தொழில்களை செய்தாலும் தன் தாத்தா பாட்டி பெயரில் இவரது குடும்பம் ஒரு அறக்கட்டளை தொடங்கி மிகப்பெரிய அளவில் மக்கள் சேவை செய்துவருகிறார்கள். தமிழ்மேல் தீராத பற்று கொண்டவர். இவரது தமிழ்ப்பணிகளை ஓளவைக் கலைக்கழகம் என்ற ஒரு அமைப்பை நிறுவி செய்துவருகிறார். அதில் குறிப்பிடத்தக்கது அந்த பல அடுக்கு கட்டிடத்தில் ஒரு தளத்தில் 46 ஆட்டிசம் உள்ளிட்ட பல பாதிப்புகள் உள்ள குழந்தைகளுக்கு ஒரு திறன் வாய்ந்த பள்ளியை, பல்வேறு புதிய உத்திகளுடன், அறிவியல் பார்வையுடன் அவர்களுக்கு பயனளிக்கும் ஒரு பள்ளியை நடத்திவருகிறார். அனைவரும் குடும்பத்தோடு சென்று பார்க்கவேண்டிய இடம்.
வாழ்க்கை பயணத்தில் வாழ்க்கையை புதிய கோணத்தில் அணுகும் பலரை சந்திப்பது ஒவ்வொரு நாளையும் பயனுள்ளதாக்குகிறது.
சீனிவாச இராமானுசன் (Srinivasa Ramanujan) :குறிப்பு
சீனிவாச இராமானுசன் (Srinivasa Ramanujan, திசம்பர் 22, 1887 – ஏப்ரல் 26, 1920) இந்தியாவில் தமிழ்நாட்டில் ஈரோடு மாவட்டத்தில் கோட்டை பகுதியில் பிறந்த கணித அறிஞர் ஆவார். இவர் தனது 33 அகவை முடியும் முன்னரே இறந்துவிட்டார். இவர் சிறு வயதிலேயே யாருடைய உதவியும் இல்லாமல் மிக மிக வியப்பூட்டும் விதத்தில் கணிதத்தின் மிக அடிப்படையான ஆழ் உண்மைகளைக் கண்டுணர்ந்தார். 1914-ஆம் ஆண்டுக்கும், 1918-ஆம் ஆண்டுக்கும் இடைப்பட்ட காலத்தில் மூவாயிரத்திற்கும் அதிகமான புதுக் கணிதத் தேற்றங்களைக் கண்டுபிடித்தார். எண்களின் பண்புகளைப் பற்றிய எண் கோட்பாடுகளிலும், செறிவெண் கோட்பாடுகளிலும் இவர் கண்டுபிடித்துக் கூறிய ஆழ் உண்மைகள் இன்று அடிப்படை இயற்பியற் துறை முதல் மின்தொடர்புப் பொறியியல் துறை வரை பல துறைகளில் உயர்மட்டங்களில் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இராமானுசனின் பெயரால் 1997 இல் The Ramanujan Journal என்னும் கணித ஆய்விதழ் ஒன்று தொடங்கப்பட்டுள்ளது. நன்றி: விக்கிப்பீடியா
அருங்காட்சியகம் செல்ல: https://maps.app.goo.gl/y3LyhkUvK23qcykD8




பூமியை நெருங்கும் வியாழன் கோள்..! வெறும் கண்களால் பார்க்கலாம்
சுவிட்சர்லாந்து: புத்தாண்டு கொண்டாட்டத்தில் வெடிவிபத்து - பலி எண்ணிக்கை 47ஆக உயர்வு
பாகிஸ்தானுடன் ரூ.6,196 கோடி மதிப்பிலான ஆயுத ஒப்பந்தத்திற்கு அமெரிக்கா ஒப்புதல்
சுற்றுலாவாசியின் தவறால்... சீனாவில் 1,500 ஆண்டுகள் பழமையான கோவிலில் தீ; வைரலான வீடியோ
ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
காஷ்மீரில் கடும் பனிப்பொழிவு.. 50 விமானங்கள் ரத்து
திருப்பதியில் ஒருநாள் உண்டியல் காணிக்கை ரூ.3 கோடியே 69 லட்சம்
டெல்லி குடியரசு தினவிழாவில் கம்பீரமாக அணிவகுத்து சென்ற தமிழ்நாட்டு அலங்கார ஊர்தி
டெல்லி கடமை பாதையில் தேசியக்கொடி ஏற்றினார் ஜனாதிபதி திரவுபதி முர்மு
போர் வீரர்கள் நினைவிடத்தில் பிரதமர் மோடி மரியாதை
டி20 உலக கோப்பைக்கான தென் ஆப்பிரிக்க அணியில் மாற்றம்
பிக்பாஷ் லீக் தொடரில் இருந்து பாபர் அசாம் விலகல்
2026 டி20 உலகக்கோப்பை தொடர் குறித்து ரோகித் சர்மா நெகிழ்ச்சி பேட்டி
முதல் டி20 போட்டி: வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு அதிர்ச்சி அளித்த ஆப்கானிஸ்தான்
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: முதல் சுற்றில் மெத்வதேவ் வெற்றி
