சுற்றுலாப் பயணிகளின் கோரிக்கையை ஏற்று கீழடி அருங்காட்சியகத்தில் 4 சுற்றுலா கைடுகள் நியமனம்.
சுற்றுலாப் பயணிகளின் கோரிக்கையை ஏற்று கீழடி அருங்காட்சியகத்தில் 4 சுற்றுலா கைடுகள் நியமனம்
சுற்றுலாப் பயணிகளின் கோரிக்கையை ஏற்று கீழடி அருங்காட்சியகத்தில் 4 சுற்றுலா கைடுகள் நியமனம் செய்துள்ளனர். தொல்லியல் துறையில் டிப்ளமோ பயின்று தமிழ், ஆங்கில மொழிகள் தெரிந்த 4 சுற்றுலா கைடுகள், பார்வையாளர்களுக்கு உதவ உள்ளனர்.
சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே உள்ள கீழடி, கொந்தகை, அகரம், மணலூர் உள்ளிட்ட இடங்களில் தொல்லியல் துறை சார்பில் அகழ் வாராய்ச்சி பணிகள் நடந்தன. கீழடியில் தமிழக அரசின் சார்பில் ரூ.18 கோடியே 40 லட்சத்தில் செட்டிநாட்டுக் கட்டிடக்கலை பாணியில் அருங்காட்சியகம் கட்டி முடிக்கப்பட்டுத் திறக்கப்பட்டுள்ளது.
இந்த அருங்காட்சியத்தில் தொல்லியல்துறையின் சார்பில் அகழ்வாராய்ச்சியில் கண்டெடுக்கப்பட்ட அரிய பொருட்கள் காட்சிப் படுத்தப்பட்டுள்ளன. கடந்த ஆண்டு ஏப்ரல் 6ம் தேதியிலிருந்து இங்கு வரும் சுற்றுலாப் பயணிகள், பள்ளி, கல்லூரி மாணவ- மாணவிகள், பேராசிரியர்கள், வரலாற்று ஆய்வாளர்கள் என ஏராளமானோர் குவிந்தவண்ணம் உள்ளனர்.
கீழடியில் உலகத்தரத்தில் அமைக்கப்பட்டுள்ள இந்த அருங்காட்சியகத்தைப் பார்வையிடும் மாணவர்கள் தமிழர்களின் பண்டைய நாகரீகத்தை அறிந்து கொள்ள மிகவும் பயனுள்ளதாக இருக்கும். தமிழர்களின் பண்டைய கால நாகரீகம் வெளி உலகத்திற்கு அடையாளம் காட்டப்பட்டுள்ளது.
சுற்றுலாப் பயணிகளுக்கு உதவ உள்ளனர்
இந்த அருங்காட்சியகத்தில் பழங்கால மண்பானை, ஓடுகள், தமிழ்ப் பிராமி எழுத்துக்கள், கருப்பு, சிவப்பு பானைகள், பண்டைய கால ஆயுத ங்கள். ஆபரணங்கள் என தமிழர்களின் வரலாற்றை அறியக் கூடிய ஆயிரக் கணக்கான பொருட்களைச் சுற்றுலாப் பயணிகள் மற்றும் மாணவர்கள் பார்வையிட்டு வருகின்றனர்.
இந்நிலையில் வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகள் கீழடி அருங்காட்சியத்தை பார்வையிட்டு அதிலிருந்து கருத்துக்களைப் புரிந்துகொள்ளச் சிரமமாக உள்ளது என்று அதனால் எங்களுக்குச் சுற்றுலா கைடுகள் நியமனம் செய்யவேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். இந்நிலையில் சுற்றுலாப் பயணிகளின் கோரிக்கையை ஏற்று கீழடி அருங்காட்சியகத்தில் 4 சுற்றுலா கைடுகளை நியமனம் செய்துள்ளனர். இவர்கள் சுற்றுலாப் பயணிகளுக்கு உதவ உள்ளனர்.




பூமியை நெருங்கும் வியாழன் கோள்..! வெறும் கண்களால் பார்க்கலாம்
சுவிட்சர்லாந்து: புத்தாண்டு கொண்டாட்டத்தில் வெடிவிபத்து - பலி எண்ணிக்கை 47ஆக உயர்வு
பாகிஸ்தானுடன் ரூ.6,196 கோடி மதிப்பிலான ஆயுத ஒப்பந்தத்திற்கு அமெரிக்கா ஒப்புதல்
சுற்றுலாவாசியின் தவறால்... சீனாவில் 1,500 ஆண்டுகள் பழமையான கோவிலில் தீ; வைரலான வீடியோ
ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
காஷ்மீரில் கடும் பனிப்பொழிவு.. 50 விமானங்கள் ரத்து
திருப்பதியில் ஒருநாள் உண்டியல் காணிக்கை ரூ.3 கோடியே 69 லட்சம்
டெல்லி குடியரசு தினவிழாவில் கம்பீரமாக அணிவகுத்து சென்ற தமிழ்நாட்டு அலங்கார ஊர்தி
டெல்லி கடமை பாதையில் தேசியக்கொடி ஏற்றினார் ஜனாதிபதி திரவுபதி முர்மு
போர் வீரர்கள் நினைவிடத்தில் பிரதமர் மோடி மரியாதை
டி20 உலக கோப்பைக்கான தென் ஆப்பிரிக்க அணியில் மாற்றம்
பிக்பாஷ் லீக் தொடரில் இருந்து பாபர் அசாம் விலகல்
2026 டி20 உலகக்கோப்பை தொடர் குறித்து ரோகித் சர்மா நெகிழ்ச்சி பேட்டி
முதல் டி20 போட்டி: வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு அதிர்ச்சி அளித்த ஆப்கானிஸ்தான்
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: முதல் சுற்றில் மெத்வதேவ் வெற்றி
