பூலாம்பாடி ஜல்லிக்கட்டு போட்டி: 45 பேர் காயம்
திருப்பூர், பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டையை அடுத்துள்ள பூலாம்பாடியில் தமிழ் புத்தாண்டையொட்டி நேற்று ஜல்லிக்கட்டு நடைபெற்றது. முன்னதாக வாடிவாசல், மாடுபிடி வீரர்கள் தளம், பார்வையாளர்கள் மாடம் என அனைத்து பகுதிகளிலும் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது. மாடுபிடி வீரர்கள் மற்றும் மாடுகளுக்கு மருத்துவ பரிசோதனைகள் செய்த பின்னரே அனுமதிக்கப்பட்டனர்.இதைத்தொடர்ந்து காலை 8 மணி அளவில் போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர், பன்னாட்டு தொழிலதிபர் டத்தோ பிரகதீஸ் குமார் ஆகியோர் ஜல்லிக்கட்டை கொடியசைத்து தொடங்கி வைத்தனர். மாவட்ட கலெக்டர் கிரேஸ் பச்சாவ், பிரபாகரன் எம்.எல்.ஏ., போலீஸ் சூப்பிரண்டு ஆதர்ஷ் பசேரா, சப்-கலெக்டர் கோகுல் ஆகியோர் முன்னிலை வகித்தனர். வாடிவாசலில் இருந்து காளைகள் ஒவ்வொன்றாக அவிழ்த்து விடப்பட்டன.வாடிவாசலில் இருந்து சீறிப்பாய்ந்த காளைகளை வீரர்கள் போட்டி போட்டு அடக்கினார்கள். அப்போது பார்வையாளர்கள் கைத்தட்டி உற்சாகப்படுத்தினர். பெரம்பலூர் மற்றும் சேலம், கள்ளக்குறிச்சி, அரியலூர், திருச்சி, கரூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து 632 காளைகள் களம் கண்டன. 332 வீரர்கள் கலந்து கொண்டு காளைகளின் திமிலை பிடித்து அடக்கினார்கள்.காளைகளை அடக்கிய வீரர்களுக்கும், பிடிபடாத காளைகளின் உரிமையாளர்களுக்கும் கட்டில், சோபா உள்ளிட்ட பரிசுகள் வழங்கப்பட்டது. ஜல்லிக்கட்டில் காளைகள் முட்டியதில் 45 பேருக்கு லேசான காயம் ஏற்பட்டது. அவர்களுக்கு அங்கிருந்த மருத்துவ குழுவினரால் முதல் உதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. இதில் 4 பேர் மேல் சிகிச்சைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.ஜல்லிக்கட்டு நடந்த பகுதியில் வெயில் கடுமையாக இருந்ததால் பார்வையாளர்கள் மற்றும் வீரர்களுக்கு வெள்ளரிக்காய், தர்பூசணி, நீர்மோர், குடிநீர் வினியோகிக்கப்பட்டது. போலீசார், தீயணைப்பு துறை, மருத்துவத்துறை, வருவாய்த்துறை உள்ளிட்ட பல்வேறு துறை அலுவலர்கள் பார்வையிட்டனர். ஜல்லிக்கட்டுக்கான ஏற்பாடுகளை தொழிலதிபர் டத்தோ பிரகதீஸ்குமார் மற்றும் விழா குழுவினர்கள் செய்திருந்தனர்.




பூமியை நெருங்கும் வியாழன் கோள்..! வெறும் கண்களால் பார்க்கலாம்
சுவிட்சர்லாந்து: புத்தாண்டு கொண்டாட்டத்தில் வெடிவிபத்து - பலி எண்ணிக்கை 47ஆக உயர்வு
பாகிஸ்தானுடன் ரூ.6,196 கோடி மதிப்பிலான ஆயுத ஒப்பந்தத்திற்கு அமெரிக்கா ஒப்புதல்
சுற்றுலாவாசியின் தவறால்... சீனாவில் 1,500 ஆண்டுகள் பழமையான கோவிலில் தீ; வைரலான வீடியோ
ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
காஷ்மீரில் கடும் பனிப்பொழிவு.. 50 விமானங்கள் ரத்து
திருப்பதியில் ஒருநாள் உண்டியல் காணிக்கை ரூ.3 கோடியே 69 லட்சம்
டெல்லி குடியரசு தினவிழாவில் கம்பீரமாக அணிவகுத்து சென்ற தமிழ்நாட்டு அலங்கார ஊர்தி
டெல்லி கடமை பாதையில் தேசியக்கொடி ஏற்றினார் ஜனாதிபதி திரவுபதி முர்மு
போர் வீரர்கள் நினைவிடத்தில் பிரதமர் மோடி மரியாதை
டி20 உலக கோப்பைக்கான தென் ஆப்பிரிக்க அணியில் மாற்றம்
பிக்பாஷ் லீக் தொடரில் இருந்து பாபர் அசாம் விலகல்
2026 டி20 உலகக்கோப்பை தொடர் குறித்து ரோகித் சர்மா நெகிழ்ச்சி பேட்டி
முதல் டி20 போட்டி: வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு அதிர்ச்சி அளித்த ஆப்கானிஸ்தான்
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: முதல் சுற்றில் மெத்வதேவ் வெற்றி
