நாகர்கோவிலில் உள்ள பாஜக அலுவலகத்தை முற்றுகையிட்டு போராடிய காங்கிரசார், பாஜகவினர் இடையே மோதல்
கன்னியாகுமரி: நாகர்கோவிலில் உள்ள பாஜக அலுவலகத்தை முற்றுகையிட்டு போராடிய காங்கிரசார் மற்றும் பாஜகவினர் இடையே மோதல் ஏற்பட்டது. காங்கிரஸ் கட்சியினர், பாஜகவினர் இடையே ஏற்பட்ட மோதலில் 2பேருக்கு மண்டை உடைக்கப்பட்டது. சாலைகளில் திரண்ட இரு கட்சியினரும் கற்களை வீசித் தாக்கிக் கொண்டதால் பரபரப்பு நிலவியது. காங்கிரஸ் பாஜகவினர் இடையேயான மோதல் காரணமாக பதற்றம் ஏற்பட்டுள்ளதால் ஏராளமான போலீஸ் குவிக்கப்பட்டுள்ளனர்.