பாலியல் புகாரில் கைது செய்யப்பட்ட கலாஷேத்ரா கல்லூரி உதவி பேராசிரியர் ஹரிபத்மன் சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஆஜர்..!!

தினகரன்  தினகரன்

சென்னை: பாலியல் புகாரில் கைது செய்யப்பட்ட கலாஷேத்ரா கல்லூரி உதவி பேராசிரியர் ஹரிபத்மன் சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். சைதாப்பேட்டை 18-வது நீதிமன்றத்தின் நீதிபதி சுப்ரமணியன் முன்பு பேராசிரியர் ஹரிபத்மன் ஆஜர்படுத்தப்பட்டார். கைது செய்யப்பட்ட பேராசிரியர் ஹரிபத்மனை, எம்.ஜி.ஆர். நகர் காவல் நிலையத்தில் வைத்து போலீஸ் விசாரணை நடத்தியது. விசாரணைக்குப் பின் உதவி பேராசிரியர் ஹரிபத்மனை நீதிமன்றத்தில்  காவல்துறை ஆஜர்படுத்தியது. பாலியல் வழக்கில் தேடப்பட்டு வந்த உதவி பேராசிரியர் ஹரிபத்மன், மாதவரத்தில் உள்ள அவரது தோழி வீட்டில் பதுங்கி இருந்தபோது கைது செய்யப்பட்டார்.

மூலக்கதை