இந்து முன்னணி நிர்வாகி இளங்கோ சென்னை மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் போலீஸ் விசாரணைக்கு ஆஜர்..!!
சென்னை: இந்து முன்னணி நிர்வாகி இளங்கோ, சென்னை மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் போலீஸ் விசாரணைக்கு ஆஜரானார். வன்முறையை ஏற்படுத்தும் வகையில் தெலங்கானாவில் நடந்த நிகழ்வு ஒன்றை டிவிட்டரில் பதிவிட்டதாக புகார் தெரிவிக்கப்பட்டது. வன்முறையை தூண்டும் வகையில் வீடியோ பதிவிட்ட புகாரில் இந்து முன்னணி நிர்வாகி இளங்கோ மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.