தீ விபத்து எதிரொலி: சென்னை அண்ணாசாலையில் உள்ள எல்.ஐ.சி. கட்டடத்தில் தீயணைப்புத்துறையினர் ஆய்வு

தினகரன்  தினகரன்

சென்னை: தீ விபத்து எதிரொலியாக சென்னை அண்ணாசாலையில் உள்ள எல்.ஐ.சி. கட்டடத்தில் தீயணைப்புத்துறையினர் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். எல்.ஐ.சி. கட்டடத்தில் தீத்தடுப்பு வசதிகள் முழுமையாக இல்லை என மாவட்ட தீயணைப்புத்துறை அதிகாரி பேட்டியளித்துள்ளார். 14 மாடி எல்.ஐ.சி. கட்டடத்தின் மேல்தளத்தில் இருந்த பெயர் பலகையில் நேற்று தீ விபத்து ஏற்பட்ட நிலையில் ஆய்வு நடத்தப்பட்டது. தரைத் தளம் உள்ளிட்ட சில இடங்களில் தீத்தடுப்பு வசதிகளில் குறைகள் இருந்ததை சுட்டிக் காட்டினோம். தீத்தடுப்பு வசதிகளை முழுமையாக ஏற்படுத்த சில அறிவுரைகளை வழங்கி உள்ளோம் என தீயணைப்புத்துறை அதிகாரி கூறினார்.

மூலக்கதை