வழக்கில் இருந்து விடுதலை செய்யப்பட்டதற்காக மீட்கப்பட்ட சிலைகளுக்கு உரிமை கோர முடியாது: ஐகோர்ட் எச்சரிக்கை
சென்னை: வழக்கில் இருந்து விடுதலை செய்யப்பட்டதற்காக மீட்கப்பட்ட சிலைகளுக்கு உரிமை கோர முடியாது என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. சிலை கடத்தல் வழக்கில் இருந்து விடுதலை செய்யப்பட்டவர்களுக்கு உயர்நீதிமன்றம் எச்சரிக்கை விடுத்துள்ளது. மீட்கப்பட்ட சிலைகள் உள்ளிட்டவற்றை சம்பந்தப்பட்ட கோயில், அருங்காட்சியகத்தில் பாதுகாக்க வேண்டும் எனவும் நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.