GPS மூலம் பேருந்து நிறுத்தம் ஒலி அறிவிப்பு திட்டம் நாளை தொடக்கம்: போக்குவரத்துத்துறை அறிவிப்பு

தினகரன்  தினகரன்
GPS மூலம் பேருந்து நிறுத்தம் ஒலி அறிவிப்பு திட்டம் நாளை தொடக்கம்: போக்குவரத்துத்துறை அறிவிப்பு

சென்னை: புவிசார் நவீன தானியங்கி அறிவிப்பான் (GPS) மூலம் பேருந்து நிறுத்தம் ஒலி அறிவிப்பு திட்டம் நாளை தொடங்கப்பட உள்ளதாக போக்குவரத்துத்துறை அறிவித்துள்ளது. சென்னை மாநகர பேருந்துகளில் தமிழ், ஆங்கிலத்தில் அடுத்துவரக்கூடிய பேருந்து நிறுத்தம் குறித்து அறிவிக்கப்படும். 300 மீட்டருக்கு முன்னதாக பேருந்து நிறுத்தத்தின் பெயர் குறித்த தகவல் பேருந்தில் ஒலிபெருக்கி மூலம் அறிவிக்கப்படும் என போக்குவரத்துத்துறை தெரிவித்திருக்கிறது.

மூலக்கதை