நடிகர் விஜயகாந்தால் பல கோடி சொத்துக்களை இழந்தேன்! : நடிகை பாணு பிரியா பேட்டி!

என் தமிழ்  என் தமிழ்

தமிழ் திரையுலகில் 80களில் பல ரசிகர்களின் கனவுக்கன்னியாக திகழ்ந்து பல முன்னணி நடிகர்களுடன் தமிழ்,மலையாளம், தெலுங்கு போன்ற் மொழிகளில் சுமார் 150 படங்களுக்கும் மேல் நடித்து 80, 90களில் பிஸி நடிகையாக இருந்தார் நடிகை பானு பிரியா.

இடையடுத்து அதர்ஷ் கெளசல் என்பவரை திருமணம் செய்து கலிஃபோர்னியாவில் செட்டிலாகி பெண் குழந்தையும் பெற்றார். இதையடுத்து சில காரணங்களால் கருத்து வேறுபாடு இருவருக்கும் ஏற்பட 2005ல் கெளசலை விவாகரத்து செய்து சென்னையில் மகளுடன் இருந்து வருகிறார்.

இந்நிலையில், ஆரம்பகால சினிமாவில் நடித்து வந்த பானு பிரியா நடிகர் விஜயகாந்த்துடன் சத்ரியன், ராஜதுரை, காவியத்தலைவன், பரதன் போன்ற படங்களில் நடித்து பெரிய வெற்றியை பெற்றது. இதனால் நடிகர் விஜயகாந்தை வைத்து தயாரிக்க ஆசைப்பட்டு ஒரு படத்தினை கோடிகளில் பணம் செலுத்தி தயாரித்துள்ளார். அப்படம் சில காரணங்களால் வெளியாகாமல் இருந்துள்ளது.

இதனால் பெரும் நஷ்டத்தை சந்தித்து சொத்துக்களை இழந்துள்ளார் பானு பிரியா. தற்போது கடைக்குட்டி சிங்கம் படத்தின் மூலம் குணச்சித்திர கதாபாத்திரத்தில் நடிக்க ஆரம்பித்துள்ளார்.

மூலக்கதை