மாமல்லபுரம் லைட்ஹவுஸ் மூடல்
சென்னை: கொரோனா தொற்று காரணமாக பழமையான மாமல்லபுரம் கலங்கரைவிளக்கம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. மாமல்லபுரம், நகரின் மையப் பகுதியில் உள்ள நீளமான பாறை மீது 135 ஆண்டு பழமை வாய்ந்த கலங்கரைவிளக்கம் அமைந்துள்ளது. தமிழகத்தில் அதிகரித்து வரும் கொரோனா தொற்றால், தமிழக அரசின் அறிவுறுத்தலின் பேரில் மாமல்லபுரம் கலங்கரைவிளக்கம் நேற்று முதல் மூடப்பட்டு, பார்வையாளர்கள் கண்டுகளிக்க தடை விதிக்கப்படுகிறது என நுழைவாயிலில் நோட்டீஸ் ஒட்டப்பட்டுள்ளது.