வழியா... வலியா... துவங்கியாச்சு பண்டிகை நெரிசல்: இப்பவே கண்ணைக் கட்டுதே! திக்குமுக்காடுது வாகனங்கள்; பொதுமக்கள் திணறல்

தினமலர்  தினமலர்
வழியா... வலியா... துவங்கியாச்சு பண்டிகை நெரிசல்: இப்பவே கண்ணைக் கட்டுதே! திக்குமுக்காடுது வாகனங்கள்; பொதுமக்கள் திணறல்

திருப்பூர்:தீபாவளி நெருங்கும் நிலையில், திருப்பூர் பிரதான சாலைகளில், தற்போதே, போக்குவரத்து நெரிசல் கடுமையாகியுள்ளது; வாகனங்கள் ஊர்ந்துதான் செல்ல வேண்டியுள்ளது.

தீபாவளியையொட்டி போலீசார் மேற்கொள்ள திட்டமிட்டுள்ள போக்குவரத்து மாற்றத்திற்கு, பயணிகள் ஒருதரப்பினரிடம் எதிர்ப்பு எழுந்துள்ளது.நவ., 4ம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. திருப்பூரில் தற்பாதே பிரதான வீதிகளில் போக்குவரத்து நெரிசல் அதிகரித்து வருகிறது. தீபாவளியையொட்டி, போக்குவரத்து மாற்றம் செய்து, மாநகர போலீஸ் தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

பயணிகளுக்கு சிரமம்பயணிகள் கூறியதாவது:திருச்சி, தஞ்சாவூரில் வரும் பஸ்கள், முதலிபாளையத்தில் இருந்து பெருந்தொழுவு வழியாக கோவில்வழி வர வேண்டுமென தெரிவிக்கப்பட்டுள்ளது. இவை நல்லுார், முத்தணம்பாளையம், செவந்தாம்பாளையம் வழியாக கோவில்வழிக்கு வந்தால் கூட பரவாயில்லை.நகருக்கு, 11 கி.மீ., முன்பே முதலிபாளையத்தில் பஸ்சை திருப்பி, பெருந்தொழுவு ரோட்டில் 9 கி.மீ., பயணித்து, பின் கோவில்வழி வர வேண்டியுள்ளது. மொத்தம், 20 கி.மீ., சுற்ற வேண்டும்.

முதலிபாளையத்தில் இருந்து நகருக்குள் புகுந்து, புதிய பஸ் ஸ்டாண்ட் வந்தாலே, பஸ் 12 கி.மீ., தான் பயணிக்கும்.இதுவரை சேலம், திருவண்ணாமலை பஸ்கள் எங்கும் நெரிசலில் சிக்காமல் ஊத்துக்குளி ரோட்டில்(தொடர்ச்சி 3ம் பக்கம்)

போலீஸ் கமிஷனர் பேட்டிதிருப்பூர் போலீஸ் கமிஷனர் வனிதா கூறியதாவது:மாநகரில் போக்குவரத்து மாற்றம் என்பது, போக்குவரத்து நெரிசல் மற்றும் கூட்டத்தை பொறுத்து, ஒரு வழிப்பாதை, வழிதடம் மாற்றம் உள்ளிட்டவற்றை அந்த நேரத்திற்கேற்ப மாற்றப்படும்.

புதிய பஸ் ஸ்டாண்டுக்கு வரும் பஸ்கள், கோவில் வழிக்கு மாற்றப்படுவது தற்போது கிடையாது. தீபாவளிக்கு சிறப்புகள் பஸ்கள் எண்ணிக்கை விபரம் கிடைத்த பின், கோவில் வழிக்கு மாற்றலாம் என்று ஆலோசித்துள்ளோம். போக்குவரத்து நெரிசல் இல்லாமல், குறைந்த துாரம் உள்ளிட்டவற்றை கணக்கில் வைத்து, வழித்தடம் மாற்றம் திட்டமிட்டுள்ளோம்.

திருப்பூர்:தீபாவளி நெருங்கும் நிலையில், திருப்பூர் பிரதான சாலைகளில், தற்போதே, போக்குவரத்து நெரிசல் கடுமையாகியுள்ளது; வாகனங்கள் ஊர்ந்துதான் செல்ல வேண்டியுள்ளது.தீபாவளியையொட்டி

சமரசத்துக்கு இடமளிக்காமல்... அதிகாரத்துக்கு அடிபணியாமல்... நேர்மையான முறையில் துணிச்சலான செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் இணையத்தள செய்தி ஊடகங்களுக்கு, விளம்பர வருவாயே உயிர்நாடி. அதுவே, நீங்கள் விரும்பி வா(நே)சிக்கும் தினமலர், இணையதளத்துக்கும்...

ஆகவே அன்பிற்கினிய வாசகர்களே,‘ஆட்பிளாக்கர்’ உபயோகிப்பதை தவிர்த்து, துணிச்சலான ஊடகத்தின் நேர்மைக்கு தோள் கொடுங்கள். உங்கள் பார்வைக்கு இடையூறாக வரக்கூடிய விளம்பரத்தை மட்டும், ’ஸ்கிரீன் ஷாட்’ எடுத்து எங்களுக்கு அனுப்புங்கள். உங்களின் சிரமத்துக்கு தீர்வு காணுகிறோம்.

நன்றி. தினமலர்

இங்கு வெளியாகும் விளம்பரங்கள், வாசகர்களுக்கு பயனளிக்கும் என்பதாலேயே சேர்க்கப்படுகின்றன. Ad blocker போடுவதன் மூலம், பயனுள்ள பல தகவல்களை நீங்கள் தவறவிடவும் வாய்ப்புண்டு. Ad blocker ஐ தவிருங்கள்.

You’ll usually find this icon in the upper right-hand corner of your screen. You may have more than one ad blocker installed.

You may have to select a menu option or click a button.

மூலக்கதை