தனியார் பள்ளிகளின் கட்டணங்களை முறைப்படுத்த அமைக்கப்பட்ட குழு; தலைவராக ஓய்வு பெற்ற நீதிபதி ஆர்.பாலசுப்ரமணியன் நியமனம்
சென்னை: தனியார் பள்ளிகள் கட்டணங்களை முறைப்படுத்துவதற்கான அமைக்கப்பட்ட குழுவிற்கு தலைவராக ஓய்வு பெற்ற நீதிபதி ஆர்.பாலசுப்ரமணியன் நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான ஆணையை உயர்நீதிமன்ற பதிவாளர் பிறப்பித்துள்ளார். தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கான கட்டணத்தை வசூலிக்க பெற்றோர்களை நிர்பந்திக்கக்கூடாது என தமிழக அரசு அரசாணை பிறப்பித்துள்ளது குறிப்பிடத்தக்கது.