கொரோனா பாதிக்கப்பட்ட ஜெ.அன்பழகன் உடல்நிலையில் முன்னேற்றம்: மருத்துவமனை வட்டாரங்கள் தகவல்

தமிழ் முரசு  தமிழ் முரசு
கொரோனா பாதிக்கப்பட்ட ஜெ.அன்பழகன் உடல்நிலையில் முன்னேற்றம்: மருத்துவமனை வட்டாரங்கள் தகவல்

சென்னை: கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் திமுக எம். எல். ஏ ஜெ. அன்பழகன் உடல்நிலையில் இன்று காலை முதல் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. தமிழக சட்டமன்ற உறுப்பினர் ஜெ. அன்பழகன்(61), கடந்த 2ம் தேதி சிகிச்சைக்காக குரோம்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அவருக்கு சுவாச பிரச்னை இருந்தது. இதையடுத்து, அவருக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது.

இதில், கொரோனா வைரஸ் தொற்று இருப்பது தெரியவந்தது.

இதைத்தொடர்ந்து அவருக்கு ‘டேஸ்மாக்’ மூலம் ஆக்சிஜன் சிகிச்சை அளிக்கப்பட்டது.

பின்னர், வென்டிலேட்டர் உதவியுடன் மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வந்தனர். வென்டிலேட்டர் மூலம் 80 சதவீதம் ஆக்சிஜன் அளிக்கப்பட்டு வந்தது.

மருத்துவர்களின் தொடர் சிகிச்சையை அடுத்து அவருக்கு தற்போது உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாகவும், 67 சதவீதம் ஆக்சிஜன் மட்டுமே செயற்கையாக அளிக்கப்பட்டு வருவதாகவும் மருத்துவமனை வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளன.


.

மூலக்கதை