மதுரை, விருதுநகரில் ஒரே நாளில் 19 பேருக்கு கொரோனா பாதிப்பு

தமிழ் முரசு  தமிழ் முரசு
மதுரை, விருதுநகரில் ஒரே நாளில் 19 பேருக்கு கொரோனா பாதிப்பு

மதுரை: மதுரை, விருதுநகர் மாவட்டங்களில் ஒரே நாளில் 19 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. வெளியூர்களில் இருந்து மதுரைக்கு விமானங்களில் வருபவர்களுக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்படுகிறது.

மதுரை கிருஷ்ணாபுரம் காலனியை சேர்ந்த 29 வயது ெபண், எஸ். எஸ். காலனியை சேர்ந்த 25 வயது பெண், திண்டுக்கல் காந்திபுரத்தை சேர்ந்த 28 வயது ஆண், விருதுநகர் ஆர். ஆர். நகரைச் சேர்ந்த 31 வயது பெண், திருநெல்வேலி மாவட்டம் உடக்கன்குளத்தைச் சேர்ந்த 38 வயது ஆண் மற்றும் கன்னியாகுமரி மாவட்டம் கொண்டின்விளையைச் சேர்ந்த 33 வயது ஆண் என 6 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

மதுரை கோ. புதூர் தொழிற்பேட்டை பகுதியை சேர்ந்த 50 வயது பெண், இவரது 26 வயது மகள், செல்லூர் கீழத்தோப்பைச் சேர்ந்த 47 வயது பெண், மதுரை அருகே உள்ள கீழப்பனங்காடியை சேர்ந்த 26 வயது பெண் மற்றும் வாடிப்பட்டியை சேர்ந்த 56 வயது பெண் என இந்த 5 பேருக்கும் கொரோனா உள்ளது. இவர்கள் 11 பேரும் மதுரையில் உள்ள அரசு கொரோனா சிறப்பு மருத்துவமனையில் சிகிச்சை பெறுகின்றனர்.

விருதுநகர் மாவட்டத்தில் எட்டக்கப்பட்டியை சேர்ந்த 28 வயது ஆண், சிவகாசி அம்மன் நகரில் 38 வயது ஆண், விளாம்பட்டி முனீஸ்நகரை சேர்ந்த தந்தை மற்றும் 2 வயது மகன்,

சாத்தூர் வெங்கடாசலபுரத்தை சேர்ந்த 21 வயது ஆண், 35 வயது பெண், சாத்தூர் நடராஜ் தியேட்டர் ரோடு பகுதி 42 வயது பெண், திருச்சுழி மேலக்கண்டமங்கலத்தை சேர்ந்த 37 வயது ஆண் என 8 பேருக்கு கொரோனா பாதிப்பு உள்ளது.

.

மூலக்கதை