நங்கநல்லூரில் 2 ஆயிரம் பேருக்கு நலத்திட்ட உதவி: உதயநிதி ஸ்டாலின் வழங்கினார்

தமிழ் முரசு  தமிழ் முரசு
நங்கநல்லூரில் 2 ஆயிரம் பேருக்கு நலத்திட்ட உதவி: உதயநிதி ஸ்டாலின் வழங்கினார்

ஆலந்தூர்: சென்னை ஆலந்தூர் தெற்கு பகுதி திமுக சார்பில், கலைஞரின் பிறந்த நாளையொட்டி, நேற்று நங்கநல்லூரில் 50 அர்ச்சகர்களுக்கு நிதியுதவி, 5 பேருக்கு தையல் மெஷின், 5 பேருக்கு சலவை பெட்டி உள்பட 2 ஆயிரம் பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. சென்னை தெற்கு மாவட்ட செயலாளர் மா. சுப்பிரமணியன் எம்எல்ஏ தலைமை தாங்கினார்.

ஆலந்தூர் எம்எல்ஏ தா. மோ. அன்பரசன், பகுதி செயலாளர் என். சந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இதில் மாநில இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு, 2 ஆயிரம் பேருக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

இதில் டி. ஆர். பாலு எம்பி, தமிழச்சி தங்கபாண்டியன் எம்பி, சட்டத்துறை செயலாளர் ஆர். எஸ். பாரதி, நிர்வாகிகள் உலகநாதன், ரத்தினம், நடராஜன், ஜெகதீஸ்வரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

.

மூலக்கதை