மதுரை மாநகராட்சியில் 20 வார்டுகளில் கொரோனா பரவல் அதிகரிப்பு.: ஆணையர் விசாகன் தகவல்
மதுரை: மதுரை மாநகராட்சியில் 20 வார்டுகளில் கொரோனா பரவல் அதிகரித்துள்ளதாக ஆணையர் விசாகன் தகவல் தெரிவித்துள்ளார். 20 வார்டுகளில் இன்று முதல் கொரோனா பரிசோதனை தீவிரப்படுத்தப்படும். மேலும் கொரோனா பரவல் அதிகரித்த தெருக்கள் மூடப்பட்டு அப்பகுதி மக்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.