சாலை ஆக்கிரமிப்பை தடுக்க நடவடிக்கை

தினமலர்  தினமலர்
சாலை ஆக்கிரமிப்பை தடுக்க நடவடிக்கை

ஆவடி : நடைபாதை ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்ட இடங்களில், புதிய ஆக்கிரமிப்புகளை தடுக்க, மாநகராட்சி நடவடிக்கை எடுத்தது.

ஆவடி, புதிய ராணுவ சாலையில், மீன், காய்கறி சந்தைகள் உள்ளன. அவற்றை ஒட்டி, நடைபாதைகளும் ஆக்கிரமிக்கப்பட்டு, போக்குவரத்து நெரிசல் நீடித்தது.இந்த நிலையில், 7ம் தேதி, ஆக்கிரமிப்புகள் முழுமையாக அகற்றப்பட்டன. அங்கு, மீண்டும் புதிய ஆக்கிரமிப்புகள் ஏற்படாத வகையில், ஆவடி மாநகராட்சியினர், தடுப்பு நடவடிக்கை மேற்கொண்டனர். நேற்று காலையும், அதற்கான பணி தொடர்ந்தது.

போக்குவரத்து போலீசாரும், சீரமைப்பு நடவடிக்கை மேற்கொண்டனர். அப்போது, சந்தைக்கு வந்து செல்லும் வாகன ஓட்டிகள், தங்களது வாகனங்களை, போக்குவரத்திற்கு இடையூறின்றி, சாலையோரம் நிறுத்த ஏற்பாடு செய்தனர்.

மூலக்கதை