அயோத்தி வழக்கில் உச்ச நீதிமன்ற தீர்ப்பை அனைத்து தரப்பினரும் சமமான சிந்தனையுடன் ஏற்க வேண்டும்: மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்

தினகரன்  தினகரன்
அயோத்தி வழக்கில் உச்ச நீதிமன்ற தீர்ப்பை அனைத்து தரப்பினரும் சமமான சிந்தனையுடன் ஏற்க வேண்டும்: மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்

சென்னை: அயோத்தி வழக்கில் உச்ச நீதிமன்ற தீர்ப்பை அனைத்து தரப்பினரும் சமமான சிந்தனையுடன் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட  அறிக்கை:நீண்ட நெடுங்காலமாக இருந்து வந்த பிரச்னைக்கு இந்திய உச்ச நீதிமன்றம் ஒரு தீர்வைக் கண்டிருக்கிறது. உச்ச நீதிமன்றத்தின் அரசியல் சட்ட அமர்வே தீர்ப்பை வழங்கியதற்குப் பிறகு, அதை எந்தவித விருப்பு-வெறுப்புக்கும் உட்படுத்தாமல்,  அனைத்துத் தரப்பினரும் சமமான சிந்தனையுடன் ஏற்றுக்கொண்டு, மதநல்லிணக்கம் போற்றி, நாட்டின் பன்முகத்தன்மைக்கு எவ்வித சேதாரமும் ஏற்பட்டுவிடாமல் எச்சரிக்கை உணர்வுடன் முன்னெடுத்துச் செல்வார்கள் என்று உறுதியாக  நம்புகிறேன்.இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

மூலக்கதை