எனக்கு பாஜ சாயம் பூச பார்க்கிறார்கள்: ரஜினிகாந்த் பரபரப்பு பேட்டி

தமிழ் முரசு  தமிழ் முரசு
எனக்கு பாஜ சாயம் பூச பார்க்கிறார்கள்: ரஜினிகாந்த் பரபரப்பு பேட்டி

சென்னை: எனக்கு பாஜ சாயம் பூச பார்க்கிறார்கள், உள்ளாட்சி தேர்தலில் போட்டியில்லை என்று ரஜினிகாந்த் கூறினார். சென்னையில் உள்ள ராஜ்கமல் அலுவலகத்தில் டைரக்டர் கே. பாலசந்தர் சிலை திறப்பு விழா இன்று நடந்தது.

ரஜினிகாந்த், கமல்ஹாசன் இணைந்து சிலையை திறந்து வைத்தனர். பின்னர் நடந்த கூட்டத்தில் ரஜினிகாந்த், கமல்ஹாசன் கலந்துகொண்டு பேசினார்கள்.

ரஜினிகாந்த் பேசியதாவது:
கமல்ஹாசனுக்கு நேற்றும் இன்றும் மிகமுக்கிய நாட்கள் ஆகும்.

அவர் நடித்த ஹேராம் படத்தை நான் முப்பது, நாற்பது முறை பார்த்திருக்கிறேன். அபூர்வ சகோதரர்கள் படத்தை பார்த்துவிட்டு நள்ளிரவில் கமல் வீட்டுக்கு சென்று அவரை பாராட்டினேன்.

டைரக்டர் கே. பாலசந்தர் ஒரு மகான். அவருக்கு சிலை வைத்தது பொருத்தமான விஷயம்.

என்னை தமிழ் கற்கச் சொல்லி உச்சத்துக்கு கொண்டு வந்தவர் பாலசந்தர்தான்.
பாலசந்தர் சாருக்கு மிகவும் பிடித்த கலைக் குழந்தை கமல்.

அவர் நடிக்கும் ஒவ்வொரு அசைவையும் ரசிப்பார். ராஜ்கமல் தயாரித்த தேவர் மகன் மிகப் பெரிய காவியம்.

கமல்ஹாசன் அரசியலுக்கு வந்தாலும் தாய் வீடான சினிமாவை மறக்கவில்லை என்பதை நிரூபித்திருக்கிறார் கமல்.

கமல்ஹாசன் பேச்சு:
திரைப்பட விழாவில் தகுதியான நபரை(ரஜினிக்கு சிறப்பு விருது) பாராட்ட உள்ளனர். 43 வருடம் தாமதமாக அவருக்கு விருது தருகிறார்கள்.

சினிமாவில் நடிக்க வந்த முதல் வருடத்திலேயே ரஜினிகாந்த் ஸ்டார் அந்தஸ்த்துக்கு வந்துவிட்டார்.   சினிமாவில் நடன கலையை போன்று என் பாணி வேறு, ரஜினி பாணி வேறு. இருவரும் மரியாதையுடன் நடந்துகொள்ள வேண்டும் என்று நானும் ரஜினியும் செய்துகொண்ட ரகசிய ஒப்பந்தம் இன்றுவரை நீடிக்கிறது.

எங்களை நாங்களே பாராட்டிக்கொள் வோம், விமர்சித்துக்கொள்வோம். நாங்கள் இருவரும் எதையும் பேசிக்கொள் வோம்.

சண்டை போடும்.

.

மூலக்கதை