தீவிரம்! 'டெங்கு' எதிரொலியால் ...குடியிருப்பு பகுதிகளில் துப்புரவு பணி

தினமலர்  தினமலர்
தீவிரம்! டெங்கு எதிரொலியால் ...குடியிருப்பு பகுதிகளில் துப்புரவு பணி

திருவான்மியூர் : அடையாறு மண்டலத்தில் உள்ள, 173, 175, 176, 180 மற்றும் 181வது வார்டில், 12 இடங்களில், 3,108 குடிசை மாற்று வாரிய வீடுகள் உள்ளன.

இந்த குடியிருப்பு வளாகங்களை பராமரிக்க, குடிசை மாற்று வாரியம், தனியாக ஊழியர்கள் நியமித்து உள்ளது. அவர்கள் முறையாக பராமரிக்காததால், சுகாதார சீர்கேடு அதிகரித்து, மர்ம காய்ச்சலால் அதிகம் பேர் பாதிக்கப்பட்டனர்.இதையடுத்து, இந்த வளாகத்தை, ஒருமுறை சுத்தம் செய்துதர, குடிசை மாற்று வாரியம், கடிதம் வாயிலாக, மாநகராட்சியை கேட்டுக் கொண்டது.

இதையடுத்து, 12 இடங்களில் உள்ள குடிசை மாற்று வாரிய குடியிருப்பு வளாகங்களை, மாநகராட்சி ஊழியர்கள் சுத்தம் செய்தனர்.அங்குள்ள குப்பை, கட்டட கழிவுகள் அகற்றப்பட்டது. அதோடு, சுகாதாரமாக வைத்திருப்பது குறித்து, குடிசை மாற்று வாரிய ஊழியர்களுக்கு, சுகாதார அதிகாரிகள் ஆலோசனை வழங்கினர்.

மூலக்கதை