கேரளாவுக்கு பஸ்சில் கடத்திய ரூ34 லட்சம் ஹவாலா பணம் பறிமுதல்: வாலிபர் கைது

தமிழ் முரசு  தமிழ் முரசு
கேரளாவுக்கு பஸ்சில் கடத்திய ரூ34 லட்சம் ஹவாலா பணம் பறிமுதல்: வாலிபர் கைது

பாலக்காடு: கோவையிலிருந்து கேரளாவுக்கு பஸ்சில் ரூ. 34 லட்சம் ஹவாலா பணம் கடத்திய வாலிபரை போலீசார் கைது செய்து பணத்தை பறிமுதல் செய்தனர்.
பாலக்காடு அருகே சந்திரநகர் பகுதியில் போலீசார் நேற்று வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். கோவையிலிருந்து பாலக்காடு நோக்கி வந்த கேரள  அரசு பஸ்சை தடுத்து பயணிகளின் உடமைகளை சோதனை செய்தனர்.

அப்போது, ஒரு பயணியின் பேக்கில் உரிய ஆவணங்கள் இல்லாமல் 500  ரூபாய் நோட்டுகள் மொத்தம் 34 லட்சம் ரூபாய் ஹவாலா பணம் மறைத்து வைத்திருந்ததை பறிமுதல் செய்தனர்.

விசாரணையில், பணத்தை எடுத்து  வந்தவர், ஆந்திரா மாநிலம் கர்னல் பகுதியைச் சேர்ந்த சேக் முகமது அன்சார் (32) என தெரியவந்தது.

இவரிடம் போலீசார் மேலும், தீவிர விசாரணை  நடத்தியதில், சென்னையிலிருந்து விமானம் மூலமாக கோவை கொண்டு வந்ததாகவும், மலப்புரத்திற்கு தங்க வியாபாரத்துக்காக கொண்டு  செல்வதாகவும் தெரிவித்தார்.

உரிய ஆவணங்கள் இல்லாததால், சேக் முகமது அன்சாரை பாலக்காடு போலீசார் கைது செய்தனர்.

.

மூலக்கதை