மேட்டுப்பாளையம் அருகே வெள்ளத்தில் சிக்கிய 51 பேர் மீட்பு

தமிழ் முரசு  தமிழ் முரசு
மேட்டுப்பாளையம் அருகே வெள்ளத்தில் சிக்கிய 51 பேர் மீட்பு

மேட்டுப்பாளையம்: மேட்டுப்பாளையம் அருகே பவானி ஆற்று வெள்ளத்தில் சிக்கி தவித்த 51 பேர் பத்திரமாக மீட்கப்பட்டனர். மேட்டுப்பாளையம் வனபத்ரகாளியம்மன் கோயிலில் இருந்து தேக்கம்பட்டிக்கு செல்லும் வழியில் பம்ப் ஹவுஸ் உள்ளது.

இதனருகே பவானி ஆறு, 2 கிளைகளாக பிரிந்து செல்கிறது. ஆற்றின் நடுவே உள்ள மண்திட்டுக்கு சுற்றுலா பயணிகள் வருவார்கள்.

நேற்று கோவை கவுண்டர்மில் மற்றும் அதை சுற்றியுள்ள 50க்கும் மேற்பட்டோர் பம்ப்ஹவுஸ் பகுதிக்கு சுற்றுலா வந்திருந்தனர்.

ஆற்றில் தண்ணீர் குறைந்த அளவே ஓடிக்கொண்டிருந்ததால், சிலர் ஆற்றில் இறங்கி குளித்தனர். குடும்பத்துடன் சுற்றுலா வந்தவர்கள், மண்திட்டில் சமையல் செய்து சாப்பிட்டு ஓய்வு எடுத்துக்கொண்டிருந்தனர்.

மாலை நேரத்தில் பில்லூர் அணையில் இருந்து திடீரென தண்ணீர் திறக்கப்பட்டதால், பவானி ஆற்றில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதை கண்டதும் சுற்றுலா பயணிகள் அதிர்ச்சியடைந்து கூச்சல் போட்டனர்.

மேட்டுப்பாளையம் காவல்துறை மற்றும் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.

தீயணைப்பு வீரர்கள் விரைந்துவந்து பரிசல் மூலம் ஆற்றில் சிக்கி தவித்த 51 பேரையும் 4 மணிநேர போராட்டத்திற்கு பின் பத்திரமாக மீட்டனர்.

.

மூலக்கதை