மோடி-சீன அதிபர் வருகையையொட்டி மின் அலங்காரத்துக்காக நிறுத்தியிருந்த ஜெனரேட்டர் மீது கார் மோதல் இளம் தம்பதி பரிதாப சாவு

தமிழ் முரசு  தமிழ் முரசு
மோடிசீன அதிபர் வருகையையொட்டி மின் அலங்காரத்துக்காக நிறுத்தியிருந்த ஜெனரேட்டர் மீது கார் மோதல் இளம் தம்பதி பரிதாப சாவு

திருக்கழுக்குன்றம்: மோடி-சீன அதிபர் வருகையால் மின் அலங்காரத்திற்காக சாலையோரம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஜெனரேட்டர் மீது கார்   மோதியது. இதில் கணவன், மனைவி பரிதாபமாக இறந்தனர்.

மாமல்லபுரம் அருகே நடந்த இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை புளியந்தோப்பு பகுதியை சேர்ந்தவர் தமிழ்மாறன் (21).

கார் டிரைவர். இவர், தனது மனைவி சுவேதா (20).

இவர்களது உறவினர் இந்துமதி   (26). இவரது மகன் பரத் (10 மாதம்).

இவர்கள் உள்பட மொத்தம் 7 பேர் சென்னை புளியந்தோப்பில் இருந்து மாமல்லபுரம் அடுத்த வெண்புருஷத்தில்   நடந்த உறவினர் வீட்டு திருமண நிகழ்ச்சிக்கு நேற்று மாலை காரில் வந்தனர்.

மாமல்லபுரம் அடுத்த திருவிடந்தை கிழக்கு கடற்கரை சாலையில் வந்து கொண்டிருந்தபோது, நிலை தடுமாறி சாலையோரம் நிறுத்தி   வைக்கப்பட்டிருந்த ஜெனரேட்டர் மீது வேகமாக கார் மோதி நொருங்கியது. காரில் இருந்தவர்கள் அலறி துடித்தனர்.

அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து,   காரில் இருந்தவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். தகவல் அறிந்து மாமல்லபுரம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்தனர்.

காயம்   அடைந்தவர்களை மீட்டு, ஆம்புலன்ஸ் மூலம் கேளம்பாக்கத்திலுள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

டாக்டர்கள் பரிசோதனை நடத்தியதில், தமிழ்மாறன், சுவேதா இறந்து விட்டது தெரிந்தது.

பரத் கவலைக்கிடமாக உள்ளதால் எழும்பூரில் உள்ள அரசு   குழந்தைகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளான். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

தமிழ்மாறன்- சுவேதா தம்பதிக்கு   திருமணமாகி 6 மாதங்களே ஆகிறது. விபத்துக்குள்ளான இவர்களது கார் மோதிய ஜெனரேட்டர், பிரதமர் மோடி - சீன அதிபர் வருகைக்காக மின்   அலங்காரத்திற்காக நிறுத்தப்பட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

இச்சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

.

மூலக்கதை